டெல்லி: சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்காக இருந்தாலும் ஜாமின்தான் முக்கியம், சிறை என்பது விதிவிலக்குதான் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பி.எம்.எல்.ஏ.) கீழ் கூட, சிறைக்கு விதிவிலக்காக ஜாமீன் வழங்குவது வழக்கமாக இருக்க வேண்டும் என்று அமலாக்கத்துறையின் நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் குட்டு வைத்துள்ளருது.

ஏற்கனவே டெல்லி கலால் கொள்கை ஊழலுடன் தொடர்புடைய பணமோசடி மற்றும் ஊழல் வழக்குகளில் பி.ஆர்.எஸ் தலைவர் கே.கவிதாவுக்கு இதே நீதிபதிகள் நேற்று ஜாமின் வழங்கிய நிலையில், இன்று ஜார்கண்ட் மாநில பிரமுகருக்கு ஜாமின் வழங்கி உள்ளது.

ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் சட்டவிரோத பணி பரிமாற்ற மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை சென்று ஜாமின் வெளியே வந்து மீண்டும் முதலமைச்சராக பதவி ஏற்ற நிலையில், இநத் வழக்கில் ஹேமந்த் சோரனுடன் சேர்ந்து கைது செய்யப்பட்ட பிரேம் பிரகாஷ் என்பவர் தொடர்ந்த ஜாமின் வழக்கில் உச்சநீதி மன்றம் அவருக்கு ஜாமின் வழங்கி பரபரப்பு கருத்தை தெரிவித்து உள்ளது.

பிஎம்எல்ஏ (PMLA)  மணி லாட்டரிங் வழக்குகளில்  கைது செய்யப்படுபவர்களின் ஜாமின் என்பது விதி என்றும், அவர்களுக்கு சிறை தண்டனை என்பது விதிவிலக்காது என்றும் வழக்கை விசாரித்த உச்சநீதி மன்ற நீதிபதிகள்  பி.ஆர்.கவாய், கே.வி.விஸ்வநாதன் அமர்வு தெரிவித்து உள்ளது.

மேலும், இந்த சட்டத்தின்படி, ஒருவர் கைது செய்யப்பட்டு காவலில் இருக்கும்போது,  விசாரணை அதிகாரியிடம் கொடுக்கப்பட்ட எந்தவொரு குற்றச்சாட்டையும் சாட்சியமாக ஏற்க முடியாது என்றும் தெரிவித்து உள்ளது, மனுதாரர் நீண்டகாலமாக சிறைவாசம் அனுபவித்து வருவதை கருதி நீதிபதிகள் ஜாமின் வழங்கியுள்ளனர்.

நீதிபதிகள் பி.ஆர்.கவை மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், பணமோசடி வழக்கில் பிரதிவாதிக்கு ஜாமீன் வழங்கும் போது இந்த விஷயத்தில் உச்ச நீதிமன்றத்தின் நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியது. பிஎம்எல்ஏவின் பிரிவு 45 ஜாமீனுக்கு இரட்டை நிபந்தனைகளை விதித்தாலும், ஜாமீன் என்பது நிலையான நடைமுறை என்ற அடிப்படைக் கொள்கையை மீறவில்லை என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.

“ஒரு தனிநபரின் சுதந்திரம் எப்போதும் விதி மற்றும் இழப்பு விதிவிலக்கு. S.45 PMLA, இரட்டை நிபந்தனைகளை விதிப்பதன் மூலம், இந்த கோட்பாட்டை மறுபரிசீலனை செய்யவில்லை, இழப்பு என்பது விதிமுறை மற்றும் சுதந்திரம் விதிவிலக்கு என்று அர்த்தம்,” என்று உச்ச நீதிமன்றம் கூறியது.

பிரதிவாதியின் நீண்ட காவலையும், ஏராளமான சாட்சிகளை உள்ளடக்கிய வழக்கு விசாரணையின் மெதுவான முன்னேற்றத்தையும் கருத்தில் கொண்டு பெஞ்ச் ஜாமீன் வழங்கியது. முன்னதாக ஜாமீன் மறுத்த ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்தது.

பிஎம்எல்ஏவின் பிரிவு 24 இல் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளபடி, ஆதாரத்தின் தலைகீழ் சுமையைப் பயன்படுத்துவதற்கு முன், அரசுத் தரப்பு முதலில் அடிப்படை உண்மைகளை நிறுவ வேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

முன்னதாக ஆகஸ்ட் மாதம், உச்ச நீதிமன்றம் 1967 ஆம் ஆண்டின் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் போன்ற சிறப்புச் சட்டங்களில் ‘ஜாமீன் விதி, சிறை விதிவிலக்கு’ என்று தனது நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியது. சிறப்பு சட்டத்தின் மூலம் நிறைவேற்றப்பட்டது  என்பதையும் சுட்டிக்காட்டியது.

உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு அமலாக்கத்துறையின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கைக்ளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே டெல்லி கலால் கொள்கை ஊழலுடன் தொடர்புடைய பணமோசடி மற்றும் ஊழல் வழக்குகளில் பி.ஆர்.எஸ் தலைவர் கே.கவிதாவுக்கு இதே நீதிபதிகள் நேற்று ஜாமின் வழங்கினர். வழக்கை விசாரித்த  நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு, கவிதா ஐந்து மாதங்களாக காவலில் இருப்பதாகவும், இந்த வழக்குகளில் அவருக்கு எதிராக மத்திய புலனாய்வு அமைப்பு (சி.பி.ஐ) மற்றும் அமலாக்க இயக்குனரகம் (ED) நடத்திய விசாரணை நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அவருக்கு ஜாமின் வழங்கியது.

இரண்டு வழக்குகளிலும் தலா 10 லட்சம் ரூபாய் ஜாமீன் பத்திரத்தை சமர்ப்பிக்குமாறு கவிதாவிடம் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. அவர் சாட்சியங்களை சிதைக்கவோ அல்லது நடவடிக்கைகளில் தாக்கத்தை ஏற்படுத்தவோ கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. கவிதா தனது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், பி.ஆர்.எஸ் தலைவர் கவிதா விசாரணை நிறுவனங்களுக்கு அறிக்கை அளித்து விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.