பாக்தாத்:
ஈராக் தலைநகர் பாக்தாத்தின் தெற்கு பகுதியான முசாயிப் நகரின் மார்க்கெட் பகுதியில் தற்கொலை படை தாக்குதல் நடந்தது.

இதில் 11 பேர் கொல்லப்பட்டனர். மக்கள் கூட்டம் அதிகம் உள்ள முசாயிப் நகரை குறிவைத்து தீவிரவாதி ஒருவம் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் மேலும் 17 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. ஐ.எஸ். பயங்கரவாதிகள் அமைப்பு பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
[youtube-feed feed=1]