இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் இரண்டாவது முறையாக அதர்வா இணைந்துள்ள புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. ராஜ்கிரண், ஆர்கே சுரேஷ், ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பிரபலங்கள் இந்த படத்தில் நடித்து இணைந்துள்ளனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை எம் ஜி எம் கடற்கரையோரம் நடைபெற்று வந்தது.

கடற்கரை மணல் மீது அமைக்கப்பட்டுள்ள இந்த செட்டிற்குள் நேற்று இரவு திடீரென கடல் நீர் புகுந்துள்ளது. இதனால் அச்சமடைந்த படக்குழுவினர் உடனடியாக சூட்டிங்கை நிறுத்தி விட்டு வெளியேறியுள்ளனர்.

இந்நிலையில் ஏற்கனவே அதர்வா படத்திற்காக பட்டத்து அரசன் என்கிற பெயர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அந்த பெயரில் படக்குழுவினருக்கு பிடித்தம் இல்லாதா காரணத்தால் பெயரில் மாற்றம் செய்ய படக்குழுவினர் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.