ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் ராம்பனில் பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக பெய்து வரும் கனமழையால், இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். 5 பேரை காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளதுடன், பல வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரம்பன் பகுதி ஸ்ரீநகரிலிருந்து சுமார் 136 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
மேலும், ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை (NH-44) தற்போது கனமழையின் விளைவாக ஏற்பட்ட நிலச்சரிவுகள் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்ததால் ஏற்பட்ட பல சேதங்களால் மூடப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக மழை கொட்டி வருகிறது. திடீர் திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டு மழை கொட்டுவதால், நிலச்சரிவுகள் ஏற்படுவதுடன், காட்டாற்று வெள்ளம் பாய்ந்து ஏராளமான சேதங்களை உருவாக்கி வருகின்றன. ஜம்மு-காஷ்மீர் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் முக்கிய வழித்தடங்கள் சேதமடைந்துள்ளன.
இதற்கிடையில், காஷ்மீர் மாநிலத்தில் பூஞ்ச், கிஷ்த்வார், ஜம்மு, ரம்பன் மற்றும் உதம்பூர் ஆகிய இடங்களில் இன்றும் நாளையும் அதிக மழை பெய்யும் என எச்சரித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் அங்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில், இன்று அதிகாலை ரம்பன் மாவட்டத்தின் ராஜ்கர் தாலுகாவில் கனமழை கொட்டியது. மேக வெடிப்பால் ஏற்பட்ட இந்த மழையால் பல இடங்களில் நிலச்சரவு ஏற்பட்டதுடன், ஏராளமான வீடுகளும் சேதமடைந்துள்ளது என்றும், இதன் காரணமாக, து 11 பேர் உயிரிழந்தனர், மேலும் ஐந்து பேரை காணவில்லை என கூறப்படுகிறது. அந்த பகுதியில் மீட்புக் குழுக்கள் காணாமல் போனவர்களைத் தேடும் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரியாசியின் மஹோர் பகுதியின் பத்ர் கிராமத்தில் திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டள்ளது. மீட்பு நடவடிக்கை நடந்து வருகிறது: மாவட்ட நிர்வாகம்ரியாசியின் மஹோர் பகுதியின் பத்ர் கிராமத்தில் திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள். மீட்பு நடவடிக்கை நடந்து வருகிறது.
தற்போது பெய்து வரும் கனமழையின் விளைவாக ஏற்பட்ட நிலச்சரிவுகள் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்ததால் ஏற்பட்ட பல சேதங்களால் ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை (NH-44) மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
கனமழை மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் இதுவரை மூன்று உடல்கள் மீட்கப்பட்டுள்ளன, காணாமல் போனவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. அப்பகுதியில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.