டெல்லி

டந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்து மறு தேர்வு நடத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு மனு தாக்கல் செய்யப்ப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 5 ஆம் தேதி இளநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்காக நடத்தப்பட்ட நீட் தேர்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததாக சர்ச்சை எழுந்தது. கடந்த 4-ந் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியானதில், 1,563 பேருக்கு கருணை மதிப்பெண் வழங்கியதும், 67 பேர் முழு மதிப்பெண் பெற்றதும் பலத்த சந்தேகத்தை எழுப்பியது.

எனவே நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாக உச்சநீதிமன்றத்திலும், 7 உயர்நீதிமன்றங்களிலும் வழக்குகள் தொடரப்பட்டன. உச்சநிதிமன்றத்தில் நடந்த விசாரணையின்போது, கருணை மதிப்பெண்கள் ரத்து செய்யப்படும் என்றும், அந்த மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும் என்றும் மத்திய அரசும், தேசிய தேர்வு முகமையும் உறுதி அளித்தன.

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததாக கூறப்படுவது பற்றி சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டு இந்த மனுவுக்கு 2 வார காலத்துக்குள் பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கும், தேசிய தேர்வு முகமைக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. பீகாரில் வினாத்தாள் கசிந்ததாக கூறப்படுவதால், அந்த மாநில அரசுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

நீட் தேர்வில் குஜராத் மாநிலத்தில் மிகப்பெரிய முறைகேடு நடைபெற்று இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த முறைகேட்டில் ரூ.2 கோடிக்கு மேல் கைமாறியிருப்பதும் கண்டறியப்பட்டு இருக்கிறது.

எனவேபல்வேறு முறைகேடு புகார்களுக்கு ஆளாகி இருக்கும் நீட் தேர்வை ரத்து செய்து விட்டு மறுதேர்வு நடத்துமாறு உச்சநீதிமன்றத்தில் வழக்கு மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. 20 மாணவர்கள் சார்பில் அந்த மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது  விரைவில்இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிகிறது.