பெங்களுரு

ரநாடக அணைகளில் இருந்து காவிரி நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிகை விடப்பட்டுள்ளது.

 

கே.ஆர்.எஸ். (கிருஷ்ணராஜ சாகர்) அணை கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி கிராமத்தில் காவிரியின் குறுக்கே அமைந்துள்ளது. மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளியில் கபினி அணை அமைந்துள்ளது. இவ்விரு அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளான குடகு மற்றும் கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் இரு அணைகளும் முழு கொள்ளளவை எட்டி உள்ள்ன.

தற்போது கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவில் இருப்பதால் அணையில் இருந்து வினாடிக்கு 70 ஆயிரத்து 44 கனஅடி தண்ணீர் அதாவது காவிரி ஆற்றில் வினாடிக்கு 68 ஆயிரத்து 825 கனஅடி நீரும், கால்வாயில் வினாடிக்கு 1,219 கனஅடி நீரும் திறந்து விடப்பட்டுள்ளது. கபினி அணையில் இருந்து வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.

தமிழகத்துக்கு இரு அணைகளில் இருந்தும் காவிரியில் வினாடிக்கு 90 ஆயிரத்து 44 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. தற்போது நேகே.ஆர்.எஸ். அணை முழுமையாக நிரம்பியதால் அணையில் இருந்து வினாடிக்கு 80 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் திறக்கப்பட வாய்ப்பு உள்ளது.

எனவே காவிரி கரையோர மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதுடன், நதி அருகே யாரும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் கால்நடைகளையும் ஆற்றின் அருகே கொண்டு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.