கொழும்பு: இலங்கை நாட்டின் 9ஆவது அதிபராக அநுரா குமார திஸநாயக பதவியேற்றார்.  அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

இலங்கை அதிபருக்கான போட்டியில், முன்னாள் பிரதமர் ரணில், அநுரா குமார திஸநாயக  மற்றும் ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்ச மற்றும் தற்போதைய அதிபர் ரணில் விக்கிரமசிங்கே சுயேட்சையாக களமிறங்கியுள்ளார்.   அதிபர் தேர்தலில்   மொத்தம் 38 பேர்  களத்தில் இருந்தாலும் 3 பேருக்கு இடையேதான் போட்டி நிலவியது.

இதில், அநுரா குமார திஸநாயக 55.89% வாக்குகள் பெற்று அதிபராக பதவி ஏற்றுள்ளார்.  இவர், ஆட்சிமாற்றம் மட்டுமல்ல, பொருளாதார வளர்ச்சியும் தேவை என்ற முழக்கத்துடன் போட்டியிட்ட நிலையில், பெருவாரியான வாக்குகள் பெற்ற இலங்கையின் 9வது அதிபராகியுள்ளார்.

இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலில்  ஜனதா விமுக்தி பெரமுனா (ஜேவிபி) மற்றும் தேசிய மக்கள் சக்தி (என்பிபி) ஆகியவற்றின் மார்க்சிஸ்ட் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க அமோக வெற்றி பெற்றதன்  நிலையில் இன்று ( திங்கட்கிழமை)  காலை இலங்கையின் அதிபராகப் பதவியேற்றார்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப்போரின்போது ராஜபக்சவின் செயல்பாடுகளை கண்டித்த குமார திஸநாயக , பல நூற்றாண்டு காலமாக நாங்கள் கண்ட கனவே இறுதியில் நனவாகி உள்ளதாக  தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  பல சிரமங்களுக்கு மத்தியில் இலட்சக்கணக்கான நீங்கள் அனைவரும் கடந்த காலத்தில் மேற்கொண்ட முயற்சி பலனளித்துள்ளது. அதற்காக என்னால் உங்களுக்கு நன்றி கூற முடியாது. அதற்கான காரணம் அது என்னுடையதல்ல, எமது கூட்டுமுயற்சியின் பெறுபேறாகும்.

இது எம்மனைவரதும் வெற்றியாகும். நாங்கள் மாத்திரமல்ல இந்த வெற்றிக்காக பல்லாயிரக்கணக்கான மனிதர்கள் தமது இரத்தம், கண்ணீர், வியர்வையை மாத்திரமன்றி உயிர்களைக்கூட தியாகம் செய்துள்ளார்கள். எமக்கு முந்திய தலைமுறையினர் எம்மிடம் கையளித்த குறுந்தடியில் வீணாகிப்போய்விடாத அவர்களின் முடிவிலா அர்ப்பணிப்பே பொதிந்துள்ளது. அதன் சுமையை நாங்கள் நன்றாகவே அறிவோம்.

எதிர்பார்ப்புகள் நிறைந்த உங்களின் இலட்சக்கணக்கான விழிகள் எமக்கு தெம்பூட்டுகின்றன.

இலங்கையின் வரலாற்றினை புதிதாக எழுத வேண்டுமென எமக்கு அழைப்பு விடுக்கின்றன. கனவை முழுமையாகவே யதார்த்தபூர்வ மானதாக அமைத்துக்கொள்வதற்காக இந்த மண்ணுக்கு புத்தம் புதிய ஆரம்பமொன்று அவசியமாகும்.

சிங்கள, தமிழ், முஸ்லீம்களாகிய எம்மனைவரதும் ஒன்று சேர்ந்த வலிமை ஆரம்பிக்கின்ற யுகத்தின் அடிக்கல்லாக அமையும். அதன் மீது தான் புதிய மறுமலர்ச்சி யுகம் கட்டியெழுப்பப்படும். வாருங்கள் நாங்கள் அதற்காக கைகோர்த்துக்கொள்வோம் என புதிய ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கை அதிபர்  அனுர குமார திசநாயகவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், அதிபராக தேர்வு செய்யப்பட்டதற்கு வாழ்த்துகள். இந்தியாவின் அண்டை நாடுகளில் பாலிசி மற்றும் விஷன் சாகர் ஆகியவற்றில் இலங்கை சிறப்பு இடம் பெற்றுள்ளது. இந்திய மக்கள் மற்றும் முழு பிராந்தியத்தின் நலனுக்காக எமது பன்முக ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தவும், உங்களுடன் நெருக்கமாக பணியாற்றவும் ஆவலாக உள்ளேன் என பதிவிட்டுள்ளார்.