நேற்றைய பிக் பாஸ் எபிசோடில் அனிதா மற்றும் ரியோ கேங் இடையே சண்டை வெடித்தது. ரோபோக்களுக்கு பெயர் வைத்தது அனிதா தான் என ரியோ குற்றம்சாட்டினார்.

இதனால் இரு தரப்புக்கும் இடையே சண்டை வெடித்தது. அதன் பின் அனிதா ஜெயிலுக்கு அனுப்பப்பட்டார். இந்நிலையில் இன்றைய முதல் ப்ரோமோவில் ஜெயிலில் இருக்கும் அனிதா வெளியில் இருக்கும் ரியோ இருவரும் சத்தமாக கத்தி சண்டை போட்டிருப்பது காட்டப்பட்டு இருந்தது.

இந்நிலையில் தன் பக்கம் இருக்கும் நியாயங்களை விளக்குகிறார் அர்ச்சனா. அதை ஏற்காமல் மறுத்து பேசுகிறார் அனிதா. ஜெயிலில் அனிதாவுடன் ரமேஷும் உள்ளார். இதனால் இவர்களின் வாக்குவாதம் ரமேஷுக்கு கடுப்பை தருகிறது. இதனால் இந்த வார எவிக்ஷன் நாளுக்காக காத்திருக்கின்றனர் பிக்பாஸ் விரும்பிகள்.