டெல்லி: கர்னூல் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் பெல்லூர்த்தி மண்டலத்தில் உள்ள மாதவபுரம் அருகில் 18 பேர் டெம்போ வேன் ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த லாரி வேன் மீது மோதியதில் வேனில் பயணித்தவர்களில் 14 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

இந்நிலையில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி நிவாரண நிதியை அறிவித்துள்ளார். அதன்படி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 50 ஆயிரமும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இந்த தகவலை பிரதமர் அலுவலகம் டுவிட்டர் பதிவு வாயிலாக வெளியிட்டு உள்ளது.