டெல்லி
சமாஜ்வாடிகட்சியின் அகிலேஷ் யாதவ் பாஜகவை கிண்டல் செய்ததற்கு அமித்ஷா பதில் அளித்தூள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் மக்களவையில் ‘திருத்தப்பட்ட வக்ஃபு வாரிய மசோதா’ மீதான விவாதம் நடைபெறும் போது சமாஜ்வாதி கட்சியின் மூத்த மக்களவை உறுப்பினர் அகிலேஷ் யாதவ் அவையில் பேசினார். பாஜகவினர் அப்போது எதிர்க்கட்சியின் வரிசையில் எம்.பி-க்கள் கூட இல்லை என பா.ஜ.க.வினர் கூறியதற்கு பதில் கொடுத்தார்
அகிலேஷ் யாதவ்,
“நான் ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன். பாரதிய ஜனதா கட்சிக்கு உள்ளேயே இப்போது யார் பெரியவர்? என்ற பிரச்சனை நிலவுகிறது. மேலும், உலகின் மிக பெரிய கட்சி பாஜக என்கிறார்கள். ஆனால் அவர்களால் இன்னும் ஒரு தேசிய தலைவரை கூட தேர்வு செய்யமுடியவில்லை”
என சிரித்துக் கொண்டே கிண்டல் அடித்தார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இதற்கு,
“நீங்கள் சிரித்து கொண்டே கூறியதிற்கு, நானும் சிரித்து கொண்டே பதில் கூறுகிறேன். எனக்கு முன்பாக உள்ள (எதிர்க்கட்சிகள் வரிசையை குறிப்பிட்டு) கட்சிகள் எல்லாம் அக்கட்சியின் தலைவரை அவர்கள் குடும்பத்தில் உள்ள ஐந்து பேரில் தேர்வு செய்தால் போதும். ஆனால் பாரதிய ஜனதா கட்சியோ கோடிக்கணக்கான தொண்டர்களின் ஆதரவுடன் பாஜக தேசிய தலைவரை தேர்வு செய்ய வேண்டும்”
என பதிலளித்தார்.