க்னோ

அகிலேஷ் யாதவ்  மகாகும்பமேளா நிர்வாக பணிகளை ராணுவத்திடம்  ஒப்படைக்க வேண்டும்  என வலியுறுத்தி உள்ளார்.

தற்போது உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமான மகா கும்பமேளா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இiது கடந்த 14ம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 26ம் தேதி வரை 45 நாட்கள் நடைபெற உள்ளது. இன்று அமாவாசை என்பதால் மகா கும்பமேளாவில் உள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராட ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்.

திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலால் பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். இல் 30 பேர் காயமடைந்ததாகவும் காயமடைந்தவர்கள் அனைவரும் பெண்கள் எனவு தகவல் வெளியாகியுள்ளது.  விரைந்து வந்த போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

சமாவாதி தலைவர் அகிலேஷ் யாதவ் எக்ஸ் தளத்தில்,,

“காயமடைந்தவர்கள் உடனடியாக ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் மூலம் சிறந்த மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட வேண்டும். இறந்தவர்களின் உடலை அடையாளம் கண்டு உறவினர்களிடம் ஒப்படைக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று அரசிடம் கேட்டுக் கொள்கிறேன்.

உலகத் தரம் என்ற வார்த்தைக்கு பின்னால் உள்ள உண்மை தற்போது அம்பலமாகிவிட்டது. பொய்ப் பிரசாரம் செய்தவர்கள் இந்த விபத்துக்கு தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்.

மகா கும்பமேளாவுக்கு வந்த துறவிகள் மற்றும் பக்தர்களிடையே பாதுகாப்பு நம்பிக்கையை மீண்டும் ஏற்படுத்த நிர்வாகம் மற்றும் மேலாண்மை பொறுப்பை மாநில அரசிடம் ஒப்படைக்காமல், உடனடியாக இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும்”

எனப் பதிவிட்டுள்ளார்.