கோழிக்கோடு

ர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறால் அவசரமாக  தரையிறக்கப்பட்டுள்ளது.

நேற்று காலை 9 மணிக்கு கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இருந்து 188 பயணிகளுடன் கத்தார் தலைநகர் தோஹாவுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் புறப்பட்டுச்சென்ற விமானம் 2 மணி நேரத்தில் நடுவானில் பறந்தபோது அதில் திடீரென்று தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.

எனவே அந்த விமானம், கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.  இது பயணிகளுக்கு மிகவும் அதிர்ச்சியை அளித்தது.

விமானநிலைய அதிகாரிகள்,

“விமானத்தின் கேபின் ஏ.சி.யில் சில தொழில்நுட்பக் கோளாறு இருந்தது. இதையடுத்து அந்த விமானம் மீண்டும் கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. அதில் இருந்த பயணிகள், மாற்று விமானம் மூலம் தோஹா செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது”

என்று தெரிவித்துள்ளனர்.