திருவனந்தபுரம்: ஐப்பசி மாத பூஜையையொட்டி, பரிமலை ஐயப்பன் கோயில் நடை வரும் 16-ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது எனெ தேவசம் போர்டு அறிவித்து உள்ளது.

புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில்  மாதந்தோறும், தமிழ் மாதத்தின் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். மேலும், மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை, பங்குனி உத்திர திருவிழா, ஓணம் போன்ற நாட்களில் கோயில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும்.

இந்த  நிலையில்,  ஐப்பசி மாத பூஜைக்காக நடை வரும் 16-ஆம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.  அய்யப்பன் கோவல், தந்திரி கண்டரரு பிரம்மதத்தன் ராஜீவரரு தலைமையில், மேல்சாந்தி பி.என்.மகேஷ் கோயில் நடையை திறந்து வைத்து தீபாராதனை காண்பிக்கிறார்.

பின்னர் 21-ஆம் தேதி இரவு 10 மணிக்கு நடை சாத்தப்படுகிறது.

அதனை தொடர்ந்து அக்.30-ஆம் தேதி  மன்னர் பாலராம வர்ம மகராஜா பிறந்த நாளில் நடைபெறும் விசேஷ பூஜையான சித்திர ஆட்டத் திருநாளுக்காக  நடை திறக்கப்பட உள்ளது. அதனப்டி,  அக்.30-ஆம் தேதி மாலை 5 மணிக்கு கோயில் நடை மீண்டும் திறக்கப்பட்டு 31 -ஆம் தேதி இரவு சாத்தப்படுகிறது.

இந்த சமயத்தில் ப ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று தேவசம் போர்டு தெரிவித்து உள்ளது.

அத்துடன்,    ஸ்பாட் புக்கிங் முறையை தேவஸ்தானம் ரத்து செய்ததற்கு  கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில்,  பல கட்டுப்பாடுகளுடன் மீண்டும் ஸ்பாட் புக்கிங் முறை கொண்டுவரவது குறித்த விவாதிக்கப்பட உள்ளதாகவும்,   திருவனந்தபுரத்தில் உள்ள தேவசம் போர்டு தலைமை அலுவலகத்தில் தலைவர் பி.எஸ்.பிரசாந்த் தலைமையில் நடைபெறும் சபரிமலை ஆய்வுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.