சென்னை:   டாஸ்மாக் ரூ.1000 கோடி ஊழல் குறித்து,   தமிழக சட்டப்பேரவையின்  எதிர்க்கட்சியான அதிமுக எம்எல்ஏ.க்கள் தங்களது சட்டைகளில் ‘அந்த தியாகி யார்?’ என்று எழுதப்பட்ட பேட்ஜ்  மற்றும் பதாதைகளுடன் வந்திருந்தனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக கவனம் ஈர்க்கும் வகையில், இன்று (ஏப்.7) தமிழக சட்டப்பேரவை அமர்வில் கலந்து கொள்ள வந்திருந்த அதிமுக எம்எல்ஏ.,க்கள்,  ‘அந்த தியாகி யார்?’ – சட்டப்பேரவைக்கு பேட்ஜ் அணிந்துவந்த அதிமுக எம்எல்ஏ.க்கள் ன பேட்ஜ் அணிந்திருந்தனர். மேலும் கையில் பதாதைகளும் கொண்டு வந்தனர்.

சட்டப்பேரவை கூட்டத் தொடர் வழக்கம்போல காலை 9.30 மணிக்கு தொடங்கியது. வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் தொடங்கிட நிலையில், அமைச்சரின் பதிலுரையும் நடைபெற்று வருகிறது

இந்த நிலையில், டாஸ்மாக்கில் ஊழல் நடைபெறுவதைக் குறிப்பிடும் வகையில் சட்டையில் ’அந்த தியாகி யார்’ என எழுதப்பட்ட பேட்ஜ் அணிந்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவைக்குள் வருகை தந்துள்ளனர். மக்களுக்கு 1,000 ரூபாய் கொடுப்பதுபோல கொடுத்து ரூ. 1,000 கோடி ஊழல் செய்த அந்த தியாகி யார்?’ என்றும் கேள்வி எழுப்பி அதிமுக சார்பில் தமிழக முழுவதும் போஸ்டர்கள் ஓட்டப்பட்டு வந்த நிலையில், ’அந்த தியாகி யார்’ பேட்ஜ் அணிந்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பேரவைக்கு வந்துள்ளனர்.

ஏற்கனவே கடந்த வாரம் திருச்சி, மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிமுக சார்பில் ‘அந்த தியாகி யார்?’ என்ற தலைப்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தமிழக சட்டப்பேரவைக்கே அதிமுக எம்எல்ஏ.,க்கள் பேட்ஜ் அணிந்து வந்துள்ளனர்.

பேரவைக்குள் யார் அந்த தியாகி பதாதைகளுடன் திமுக அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். டாஸ்மாக் ஊழல் குறித்து விவாதிக்க வலியுறுத்தினர். இதை சபாநாயகர் அப்பாவு ஏற்க மறுத்த நிலையில், அதிமுக எம்.எம்ஏக்கள் கோஷமிடனர். இதையடுத்து அவர்களை வெளியேற்ற உத்தரவிட்ட சபாநாயகர் அப்பாவு, அதிமுக எம்எல்எக்களை ஒரு நாள் இடைநீக்கம் செய்வதாக அறிவித்தார்.

இது தொடர்பாக அதிமுக வெளியிட்ட பதிவில்,  மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையில், அமலாக்கத்துறை அறிக்கையில் சொன்ன ஆயிரம் கோடி ரூபாய் #டாஸ்மாக்_ஊழல் பின்னணியில் உள்ள #அந்த_தியாகி_யார் ? என்ற கேள்வியை பேட்ஜாக அணிந்து சட்டப்பேரவை நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், டாஸ்மாக்_ஊழல் பின்னணியில் உள்ள #அந்த_தியாகி_யார் ? என்ற கேள்வியை பேட்ஜாக அணிந்து சட்டப்பேரவை நிகழ்வுகளில் அதிமுக உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இது தொடர்பாக அதிமுக வெளியிட்ட பதிவில்,   கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில்,அமலாக்கத்துறை அறிக்கையில் சொன்ன ஆயிரம் கோடி ரூபாய் #டாஸ்மாக்_ஊழல் பின்னணியில் உள்ள #அந்த_தியாகி_யார் ? என்ற கேள்வியை பேட்ஜாக அணிந்து சட்டப்பேரவை நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திலும் பல்வேறு மதுபான ஆலைகளிலும் அமலாக்கத் துறையினர் மார்ச் 6 முதல் 3 நாள்களுக்குச் சோதனை நடத்தினர். சோதனை அடிப்படையில் ரூ.1,000 கோடி வரை முறைகேடுகள் நடந்திருப்பதாக அமலாக்கத் துறை அறிவித்தது.இந்த முறைகேடுகள் 1988ஆம் ஆண்டின் ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி குற்றம் என்றும், இதன் மூலம் கிடைத்த ஆதாயங்கள் 2002ஆம் ஆண்டின் கறுப்புப் பணத் தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டியவை என்றும் அமலாக்கத் துறை சுட்டிக்காட்டியது.

சில்லறை விற்பனை டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டிலுக்குக் கூடுதலாக ரூ.10 முதல் 30 வரை வசூல் செய்தது, டாஸ்மாக் ஊழியர்களுக்கு மது ஆலைகள் லஞ்சம் வழங்கியது போன்ற முறைகேடுகள்; கொள்முதல் எண்ணிக்கை, பணியிட மாற்றம், பார் உரிமங்கள், அதற்கான ஒப்பந்தங்கள் வழங்குதல், பாட்டில் கொள்முதல், போக்குவரத்து போன்றவற்றில் முறைகேடுகள் நடந்ததாக அமலாக்கத் துறை பட்டியலிட்டது.

இந்த சோதனையை சட்​ட​விரோதம் என அறிவிக்​கக் கோரி​யும் டாஸ்​மாக் அதி​காரி​களை விசா​ரணை என்ற பெயரில் துன்​புறுத்​தக்​கூ​டாது என உத்​தர​விடக்​கோரி​யும் தமிழக அரசு மற்​றும் டாஸ்​மாக் நிறு​வனம் சார்​பில் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்​கு​கள் தொடரப்​பட்​டன.

இந்த வழக்​கு​களை ஏற்​கெனவே விசா​ரித்த நீதிப​தி​கள் எம்​.எஸ்​.ரமேஷ், என். செந்​தில்​கு​மார் ஆகியோர் அடங்​கிய அமர்​வு, இந்த சோதனை​யின் அடிப்​படை​யில் அமலாக்​கத் துறை மேல்​நட​வடிக்கை எடுக்​கக் கூடாது என இடைக்​காலத் தடை விதித்​தனர். அதன்​பிறகு இந்த வழக்கு விசா​ரணை​யில் இருந்து இரு நீதிப​தி​களும் வில​கினர்.

அதையடுத்து, இந்த வழக்கு விசா​ரணை நீதிப​தி​கள் எஸ்​.எம்​.சுப்​ரமணி​யம், கே.​ராஜசேகர் ஆகியோர் அடங்​கிய அமர்​வுக்கு மாற்​றப்​பட்​டது. கடந்​த​முறை இந்த வழக்கை விசா​ரித்த நீதிப​தி​கள், இந்த வழக்​கில் அமலாக்​கத் துறை​யின் பதில் மனுவுக்கு தமிழக அரசு தரப்​பில் பதிலளிக்க உத்​தர​வி்ட்டு விசா​ரணையை வரும் ஏப்​.8-ம் தேதிக்கு தள்​ளி​வைத்​தனர். ஏப்.8 மற்​றும் ஏப்.9 ஆகிய இரு தேதி​களில் இந்த வழக்​கில் இறு​தி​விசா​ரணை நடத்​தப்​படும் எனவும் நீதிப​தி​கள் அறி​வித்​துள்​ளனர்.

இந்​நிலை​யில், இந்த வழக்கை சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் இருந்து வேறு மாநிலத்​துக்கு மாற்​றக்​கோரி தமிழக அரசு சார்​பில் மூத்த வழக்​கறிஞர் விக்​ரம் சவுத்​ரி, உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி சஞ்​சீவ் கண்ணா தலை​மையிலான அமர்​வில் முறை​யீடு செய்​தார். அந்த முறை​யீட்டை ஏற்ற தலைமை நீதிப​தி, இதுதொடர்​பாக மனு தாக்​கல் செய்​தால் வரும் ஏப்​.7 அன்​று வி​சா​ரிக்​கப்​படும்​ என தெரி​வித்திருந்தார்.

இந்நிலையில், இன்று (ஏப்.7) தமிழக சட்டப்பேரவை அமர்வில் கலந்து கொள்ள வந்திருந்த அதிமுக எம்எல்ஏ.,க்கள், ‘அந்த தியாகி யார்?’ என்று எழுதப்பட்ட பேட்ஜ் அணிந்து வந்திருந்தனர்.

‘யார் அந்த சார்?’ கடந்த ஜனவரி மாதம், சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தில் நீதி கோரி அதிமுக எம்எல்ஏ.க்கள் தங்களது சட்டைகளில் ‘யார் அந்த சார்?’ என்ற பேட்ஜை அணிந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

1000கோடியை அமுக்கிய #அந்த தியாகி யார்? ஈரோடு, கோபி, பவானியை கலக்கும் போஸ்டர்….