சென்னை
சென்னை – ஷாலிமார் ரயிலில் முன்பதிவில்லா பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன.
இந்திய ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
“சென்னை சென்ட்ரல் -ஷாலிமார் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு ஏசி டூ டயர் மற்றும் ஒரு ஏசி த்ரீ டயர் பெட்டிகளுக்கு பதிலாக இரண்டு முன்பதிவில்லா இரண்டாம் வகுப்பு பெட்டிகள் சேர்க்கப்படும். இந்த மாற்றமானது ஏப்ரல் 15ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
மறுமார்க்கத்தில் இருந்து ஷாலிமார் – சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ரயிலிலும் ஒரு ஏசி டூ டயர் மற்றும் ஒரு ஏசி த்ரீ டயர் பெட்டிகளுக்கு பதிலாக இரண்டு முன்பதிவில்லா இரண்டாம் வகுப்பு பெட்டிகள் சேர்க்கப்படும். இந்த மாற்றமானது ஏப்ரல் 16ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இந்த திருத்தத்திற்குப் பிறகு மேற்கண்ட ரயில்களின் பெட்டி அமைப்பு 2- ஏசி டூ டயர் பெட்டிகள், 6- ஏசி த்ரீ டயர் பெட்டிகள், 5- ஸ்லீப்பர் வகுப்பு பெட்டிகள், 4- பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள், 1- இரண்டாம் வகுப்பு பெட்டி மற்றும் 1- லக்கேஜ் கம் பிரேக் வேன் இருக்கும்”
என அறிவிக்கப்ப்பட்டுள்ளது.