
டில்லி,
அனைத்துவிதமான பரிவர்த்தனைகளுக்கும் ஆதார் எண் கட்டாயம் என்று அறிவித்துள்ள மத்திய அரசு தற்போது 18 வயதுக்கு மேற்பட்டோர் பாஸ்போர்ட் பெற ஆதார் எண் கட்யம் என்று அறிவித்து உள்ளது.
மோடி தலைமையிலான பாரதியஜனதா அரசு பதவிக்கு வந்ததில் இருந்து அனைத்து விதமான வங்கி சேவைகள் மற்றும் சமூக சேவைகள் அனைத்துக்கும் ஆதார் கட்டாயம் என்று அறிவித்துள்ளது.
இதை எதிர்த்து தொடரப்பட்ட பல வழக்குகள் அரசியல் சாசன அமர்வில் நிலுவையில் இருக்கும் நிலையில், தற்போது 18 வயதுக்கு மேற்பட்டோர் பாஸ்போர்ட் பெறவும் ஆதார் கட்டாயம் என்று அறிவித்து உள்ளது.
Patrikai.com official YouTube Channel