டெல்லி:  நாட்டின் 78வது சுதந்திரதினத்தையொட்டி நாடு முழுவதும் காவல்துறை, தீயணைப்பு, ஊர்க்காவல்படை உள்பட பல்வேறு பாதுகாப்பு துறையைச் சேர்ந்த  1037 பணியாளர்களுக்கு உள்துறை அமைச்சகத்தின்  பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாட்டின் சுதந்திரன தினத்தை முன்னிட்டு,  நாடு முழுவதும் காவல்துறை, தீயணைப்பு துறை, ஊர்காகவல் படை உள்பட  அனைத்து வகையான காவல்பணிகளில்  தனிச்சிறப்புடன் பணியாற்றும் வீரர்களுக்கு பதக்கங்கள் வழங்கி கவுரிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, நாடு முழுவதும் 1037 காவல்துறை பணியாளர்களுக்கு பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

காவல்துறை, தீயணைப்பு, ஊர்க்காவல்படை மற்றும் குடிமைத் தற்காப்பு (HG&CD) மற்றும் சீர்திருத்தப் பணிகளில் மொத்தம் 1037 பணியாளர்களுக்கு வீரம் மற்றும் சேவைப் பதக்கங்கள்  அறிவிக்கப்பட்டு உள்ளன.

2024 சுதந்திர தினத்தன்று சிறப்பான சேவைக்கான குடியரசுத் தலைவரின் பதக்கம்/சிறந்த சேவைக்கான பதக்கம் பெற்றவர்களின் பட்டியல்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த 23 காவல்துறை அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் பதக்கம் அறிவிப்பு!