டெல்லி: வங்கக்கடலில்  நவம்பர் 21-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் வாய்ப்பு உள்ளதாக இந்திய  வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துருள்ளது.

வங்கக்கடலில் வரும் நவம்பர் 21-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாக வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது. இந்தப் புதிய சூழல் காரணமாகத் தமிழகத்தில் கனமழை எதிர்பார்க்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காலைத்தையொட்டி, பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில்,   நவம்பர் 21-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாக வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது. இந்தப் புதிய சூழல் காரணமாகத் தமிழகத்தில் கனமழை எதிர்பார்க்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை காலத்தில்,  அக்டோபர் மாதம்: தமிழ்நாட்டில் 23 செ.மீ. மழை பெய்தது. இது கடந்த 12 ஆண்டுகளில் பதிவான மூன்றாவது அதிகபட்ச மழை அளவாகும். இதனால் வடகிழக்குப் பருவமழை சிறப்பாகவே தொடங்கியது.

ஆனால் நவம்பர் மாதம் மழை குறைவாக  காணப்படுகிறது.  நவம்பர் மாதத்தின் முதல் 10 நாட்களில் வெறும் 1.5 செ.மீ. மழை மட்டுமே பதிவாகியுள்ளது. நவம்பர் மாதத்தின் சராசரி மழை அளவு 18 செ.மீ. என்பதால், இது மிகவும் குறைவு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்: மழையின் அளவு குறைந்த நிலையில், தற்போது தென்கிழக்கு வங்கக்கடலில் வரும் 21-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும், இந்தக் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான அடுத்த நாளான நவம்பர் 22-ம் தேதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாகத் தமிழ்நாட்டில் கனமழை எதிர்பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி தற்போது நிலவி வருகிறது.  தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இன்று  நவம்பர் 14 மற்றும் 15, 2025 ஆகிய இரண்டு நாட்களில், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நவம்பர் 16 அன்று, ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நவம்பர் 17 அன்று, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நவம்பர் 18 அன்று, ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதில், தூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

இறுதியாக, நவம்பர் 19, 2025 அன்று, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.