புதுச்சேரி:
புதுச்சேரியில் ஒரேநாளில் 43 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 946ஆக உயர்ந்துள்ளது.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 24,850 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த எண்ணிக்கை 6,73,165 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3,94,227 லிருந்து 4,09,083 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், புதுச்சேரியில் ஒரேநாளில் 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 946ஆக உயர்ந்துள்ளது.
[youtube-feed feed=1]