சென்னை:
ங்கக்கடலில் அம்பான் புயல் உருவாகி வருவதைத் தொடர்ந்து, இயற்கை பேரிடரை சமாளிக்க தயார் நிலையில் இருங்கள் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு, பேரிடர் மேலாண்மை ஆணையர் ராதாகிருஷ்ணன் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

வங்கக்கடலில் இன்று மாலை அம்பான் புயல் உருவாக உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நாகை, காரைக்கால், தூத்துக்குடி ஆகிய மாவட்ட துறைமுகங்களில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும் கடலில் சூறாவளி காற்று வீசுவதால், மீனவர்கள் கடலுக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில்,   தமிழக்தில் புயல் போன்ற இயற்கை பேரிடர் காலங்களை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையர் ராதாகிருஷ்ணன் சுற்றறிக்கை விடுத்துள்ளார்.
பேரிடர் காலங்களில் ஏற்படும் தேவைகளை பூர்த்தி செய்ய வியூகங்கள் வகுக்கவும், சீல் வைக்கப்பட்ட இடங்களில் புயல் எச்சரிக்கை இருந்தால் மக்கள் அனைவரையும் இடமாற்றம் செய்ய வேண்டும்,
பேரிடர் மீட்பு பணியில் ஈடுபடுபவர்களுக்கு தேவையான கொரோனா தடுப்பு உபகரணங்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்,
மீட்பு பணிகளின் போது சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அணிவது அவசியம்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.