வெளிநாடுகளில் தஞ்சம் கோருவோர் மீதான கடுமையான பாஸ்போர்ட் சட்டத்தை இலங்கை அரசு திரும்பப் பெற்றது.
இலங்கையின் துன்புறுத்துதலிருந்து தங்களை காப்பற்றிக்கொள்ள அந்நாட்டை விட்டுத் தப்பி ஓடியவர்களிடமிருந்து பாஸ்போர்ட்டை பறிக்க வேண்டும் என்ற முந்தைய ஆட்சியின் கடுமையான விதிகளைப் புதன்கிழமை அன்று இலங்கை அரசாங்கம் முடிவுக்குக் கொண்டு வந்தது.
வெளிநாடுகளில் தஞ்சம் கோரியோர் தாய்நாட்டிற்கு திரும்பும் வாய்ப்பினை மறுக்கும் விதமாக அவர்களுக்குப் புதிய பாஸ்போர்ட் வழங்கக் கூடாது என்று அனைத்து இலங்கை அலுவலங்கங்களுக்கும் 2011ல் ராஜபக்ஷ நிர்வாகம் உத்தரவிட்டது.
“அரசாங்கம் ஒரு வட்ட இன்று அரசியல் துன்புறுத்தல் காரணமாக இலங்கையை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் குடிபெயர்ந்துள்ள இலங்கை குடிமக்களுக்கு பாஸ்போர்ட் வழங்குவதை தடுக்கும் கட்டுப்படுத்தப்பட்ட நடைமுறையை முடிவுக்குக் கொண்டுவருமாறு அரசாங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது,” என்று அரசாங்கம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பாஸ்போர்ட் புதுப்பிக்க மறுத்து இலங்கை பிரஜைகளின் உரிமைகளைத் தீவிரமாக மீறியதாக ராஜபக்ஷ ஆட்சிமீது குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.
வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரா, இன்னமும் குடிவரவு கட்டுப்பாட்டாளரால் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத உத்தரவுகளை அரசு திரும்பப் பேற வேண்டும் என்பதில் முக்கிய கருவியாக இருந்தார்.
“இந்தக் கடுமையான நடைமுறையை முடிவுக்குக் கொண்டு வந்து சுதந்திரம் அடைந்ததிலிருந்து பின்பற்றி வந்த நடைமுறையை மீட்டு, வெளிநாட்டில் வாழும் ஒவ்வொரு இலங்கை குடிமகனும் பாஸ்போர்ட் பெற உதவ வேண்டும் என்று குடிவரவு மற்றும் குடியகல்வு டிபார்ட்மெண்ட்டின் கட்டுப்பாட்டாளர்- ஜெனரல் அவர்களுக்கு அரசு உத்தரவிட்டது”.
தமிழ் பிரிவினைவாத யுத்தம் முடிந்து ஏழு வருஷத்திற்குப் பின், நல்லிணக்கத்தை உறுதி செய்யவும் தான் அரசாங்கம் இதுபோல் ஒரு முடிவு எடுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகிறது.
Patrikai.com official YouTube Channel