கணினிப் பூக்கள்

கவிதைத் தொகுப்பு – பகுதி 45

பா. தேவிமயில் குமார்

 

மழைக் காதலன்

யாரிடம் கோபம்
எதற்காக கண்ணீர்?
என்னோடு வா!!

தூரத்தில் இருந்த நீ
எனக்கு
துணையாக மாறினாய்!

கார்முகில் துண்டால் என்
கருங்கூந்தல் துவட்ட
வந்தாயோ??

என்வீட்டு முற்றம்
முன்பாக உனை
மறந்து நிற்பதேன்??
உனை தடுப்பது யார்?

கலர் குடை பிடித்து
காதலனே உனை
கரம் பற்றிடுவேன்!!

பருவம் தவறாது எனை
பார்க்கவே பயணம்
செய்து வருகிறாயோ?

மழைக் காதலனே…..
உனக்காக யுகமாய்
உயிர் தாங்கி நிற்கிறேன்!!
காலம் காலமாக
களர் நிலமாக…..

மும்மாரியாக அல்ல
முத்தமாரியாக
எனக்கு நீ வேண்டும்….
மழைக் காதலனே😌😌😌😌

பா. தேவிமயில் குமார்

[youtube-feed feed=1]