டெல்லி:  இந்தியா சீனா இடையே கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட விமான சேவை மீண்டும் தொடங்க உள்ளது. இரு நாடுகளுக்கு இடையே நட்புறவு துளிர்த்துள்ள நிலையில், அக்டோபர் 26ந்தேதி முதல் இந்​தியா – சீனா இடையே 5 ஆண்​டு​களுக்கு பிறகு மீண்​டும் நேரடி விமான சேவை  தொடங்​கப்​படு​கிறது.  இதை இந்திய வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ, அக்டோபர் 26, 2025 முதல் கொல்கத்தாவிலிருந்து குவாங்சோவிற்கு தினசரி நேரடி விமானங்களைத் தொடங்கும் என்றும், டெல்லி வழித்தடத்தில் ஒரு விமானம் ஒழுங்குமுறை அனுமதி நிலுவையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. டெல்லி மற்றும் கொல்கத்தா இரண்டையும் குவாங்சோவிற்கு இணைக்கும் இரட்டை தினசரி சேவைகளை ஏர் இந்தியா இயக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஏர் இந்தியா 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் சீனாவிற்கு விமானங்களை மீண்டும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் டெல்லி-ஷாங்காய் வழித்தடம் முதலில் மீண்டும் தொடங்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகை ஆட்டிப்படைந்த கொரோனா பெருந்தொற்று சீனாவில் இருந்து வெளியானதாக கூறப்பட்டது. இதையடுத்து, உலக நாடுகளில் பொருளாதாரமே கடுமையாக தள்ளாடியது. சுமார் இரண்டு ஆண்டுகள் பொதுமக்களும் சொல்லோனா துயரத்துக்கு ஆளாகினர். இதன் காரணமாக,   கடந்த 2020-ம் ஆண்டு  இந்​தியா – சீனா இடையே விமான சேவை ரத்து செய்​யப்​பட்​டது.

இந்த சலசலப்புக்கு மத்தியில் 2020ம் ஆண்டு ஜூன் 15-ம் தேதி லடாக்​கின் கல்​வான் பள்​ளத்​தாக்​கில் இந்​தியா – சீனா ராணுவ வீரர்​கள் இடையே மிகப்​பெரிய மோதல் ஏற்​பட்​டது. இதில் இந்​திய தரப்​பில் 20 வீரர்​கள், சீன தரப்​பில் 45 பேர் உயி​ரிழந்​தனர் .இதன்​காரண​மாக, இரு நாடு​கள் இடையி​லான உறவில் மிகப்​பெரிய விரிசல் ஏற்​பட்​டது. இதனால் சீனா வுடனான நட்பை இந்தியா துண்டித்தது. மேலும் சீன பொருட்களை வாங்க வேண்டாம் என நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இந்த நிலையில், அமெரிக்கா சமீபத்தில் இந்திய பொருட்களின் மீதான கடுமையான வரி விதிப்பு, விசா கட்டணம் உயர்வு போன்றவை சர்​வ​தேச அளவில் பல மாற்​றங்​களை ஏற்​படுத்​தி​யது.  இந்த சூழலில், குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்​முவுக்கு சீன அதிபர் ஜி ஜின்​பிங் சமீபத்​தில் ரகசிய கடிதம் ஒன்றை அனுப்​பி​யிருந்​தார்.

அந்த கடிதத்தில்,  ‘சர்​வ​தேச விவ​காரங்​களில் இந்​தி​யா​வும், சீனா​வும் ஒருங்​கிணைந்து செயல்பட வேண்​டும். எல்​லை​யில் அமை​தியை ஏற்​படுத்த வேண்​டும். அமெரிக்​கா​வின் வரி​வி​திப்பு போரை தடுத்து நிறுத்த வேண்​டும்’ என்று அழைப்பு விடுத்​திருந்​தார்.

அதைத்தொடர்ந்து,   ஷாங்​காய் ஒத்​துழைப்பு அமைப்​பின் உச்சி மாநாட்​டில் பங்​கேற்​கு​மாறு பிரதமர் மோடிக்கு சீன அதிபர் சிறப்பு அழைப்பு விடுத்​தார். இதை ஏற்​றுக்​கொண்ட பிரதமர் மோடி, கடந்த ஆகஸ்ட் இறு​தி​யில் சீனா​வின் தியான்​ஜின் நகரில் நடை​பெற்ற ஷாங்​காய் உச்சி மாநாட்​டில் பங்​கேற்​றார். அப்​போது பேசிய மோடி, “இந்​தி​யா​வும் சீனா​வும் கூட்​டாளி​கள்தான், எதிரி​கள் அல்ல” என்று கூறினார். இதே கருத்தை சீன அதிபர் ஜி ஜின்​பிங்​கும் வழிமொழிந்​தார்.

உச்சி மாநாட்​டின் ஒரு பகு​தி​யாக பிரதமர் மோடி​யும், அதிபர் ஜி ஜின்​பிங்​கும் விரி​வான பேச்​சு​வார்த்தை நடத்​தினர். அப்​போது மீண்​டும் நேரடி விமான சேவையை தொடங்​க​ முடிவு செய்​யப்​பட்​டது. அதன்​படி, மேற்கு வங்​கத் தலைநகர் கொல்​கத்தா – சீனா​வின் குவாங்சூ நகரங்​களுக்கு இடையே நேரடி விமான சேவை அக்​. 26-ம் தேதி தொடங்க உள்​ளது.

இதுதொடர்பாக  ‘இரு நாடு​களின் விமான போக்​கு​வரத்து துறை அதி​காரி​கள் சமீபத்​தில் முக்​கிய பேச்​சு​வார்த்தை நடத்​தினர். இதில் எட்​டப்​பட்ட முடி​வின்​படி, அக்​டோபர் இறு​தி​யில் இரு நாடு​கள் இடையே நேரடி விமான சேவை தொடங்​கப்​படு​கிறது’ என்று மத்​திய வெளி​யுறவுத் துறை அறிவிப்பு வெளியிட்டது.

ஏற்கனவே இந்​தியா – சீனா இடையே மாதம்​தோறும் 539 நேரடி விமான சேவை​கள் இயக்​கப்​பட்டு வந்​தன. ஏர் இந்​தி​யா, சீனா சதர்ன் ஏர்​லைன்​ஸ், சீனா ஈஸ்​டர்ன் ஏர்​லைன்ஸ் நிறு​வனங்​கள் பயணி​கள், சரக்கு விமானங்​களை இயக்​கின. இதன்​மூலம் மாதம்​தோறும் இரு நாடு​களை சேர்ந்த 1.25 லட்​சம் பேர் விமான பயணம் மேற்​கொண்​டனர். பின்னர் விமான சேவை நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் நேரடி  விமான சேவை தொடங்க உள்ளது.

தற்போது சீனா செல்ல வேண்டுமானால்,  பயணி​கள் வங்​கதேசம், ஹாங்​காங், தாய்​லாந்​து, சிங்​கப்​பூர் வழி​யாக சீன நகரங்​களுக்கு செல்லும் நிலை உள்ளது, இதனால் கட்டணமும் அதிகம் என்பது  குறிப்பிடத்தக்கது.