மதுரை: மதம் மாறிய கிறிஸ்தவர், இந்து என பொய் சொல்லி தேர்தலில் போட்டியிட்டு  வெற்றிபெற்றது செல்லாது என  மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.

தமிழ்நாட்டில் அரசு துறை  ஆசிரியர்கள் உள்பட பல்வேறு துறைகளில், மதம் மாறிய பலர், இன்றளவும், மழைய இந்து மதம் குறித்த சான்றிதழ்களை வைத்துக்கொண்டு பல்வேறு சலுகைகளை பெற்று வருகின்றனர். இந்த நிலையில்,  கிறிஸ்தவ மதத்துக்கு  மாறியதை மறைத்து பேரூ​ராட்​சித் தலை​வர் தேர்​தலில் இந்து பட்டியல் இனத்தவர் என   ஏமாற்றி  தேர்தலில்போட்டியிட்டு,  வென்ற அதி​முக பெண் கவுன்​சிலர், பின்னர் பேரூராட்சி தலவரான நிலையில், அவரது  பதவியை ரத்து செய்து உயர் நீதி​மன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக, கன்​னி​யாகுமரி மாவட்​டம், தேரூர் பேரூ​ராட்​சிக் கவுன்​சிலர் அய்​யப்​பன் என்பவர்  உயர் நீதி​மன்ற மதுரையில் வழக்கு தொடர்ந்திருந்ததார். அவரது மனு​வில் , தேரூர் பேரூ​ராட்​சி​யில் 2022-ல் நடை​பெற்ற தேர்​தலில் திமுக சார்​பில் 8-வது வார்​டில் போட்​டி​யிட்டு கவுன்​சில​ரானேன். பேரூ​ராட்​சித் தலை​வர் பதவி பட்​டியலினத்​துக்கு ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டது. இந்த பதவிக்கு,  அங்குள்ள  2-வது வார்டில் போட்டியிட்டு வெற்றிபெற்ற  அதி​முக கவுன்​சிலர் அமு​தா​ராணி தேர்வு பெற்றார்.  அமுதாராணி  கிறிஸ்தவ மதத்​தைச் சேர்ந்​தவர். இவர் ஏற்கனவே இந்து பட்​டியல்  இனத்தை சேர்ந்தவர் என்ற  நிலையில், கடந்த  2005-ம் ஆண்​டிலேயே மதம் மாறி கிறிஸ்தவ மதத்​தில் இணைந்​து, கிறிஸ்​தவரை திரு​மணம் செய்​தவர். ஆனால்  இந்து பட்​டியல் சமூகத்​தைச் சேர்ந்​தவர்  என ஏமாற்றி தேர்தலில் போட்டியிட்டுள்ளார்.

இந்து பட்டியல் இனத்தவர்கள்,  வேறு மதத்​துக்கு மாறினால், அவர் பட்​டியலினப் பிரி​வினருக்​கான இடஒதுக்​கீட்​டுப் பலனைப் பெற முடி​யாது என்பது அரசியல் சாசன விதி. ஆனால், அமுதாராணி தனது உண்மையான இனம் குறித்து தெரிவிக்காமல் ஏமாற்றி, தான் இந்து பட்​டியலினத்​தைச் சேர்ந்​தவர் என்று கூறி தேர்​தலில் போட்​டி​யிட்​டு, வெற்றி பெற்​றுள்ளார்.  இது சட்​ட​விரோத​மானது.

எனவே, தேரூர் பேரூ​ராட்​சித் தலை​வ​ராக உள்ள அமு​தா​ராணி​யின் பட்​டியலின சாதிச் சான்​றிதழை ரத்து செய்​து, அவரை தலை​வர் பதவி​யில் இருந்து தகுதி நீக்​கம் செய்து உத்​தர​விட வேண்​டும் என  கூறி​யிருந்​தார்.

இந்த மனுவை தனி நீதிபதி விக்​டோரியா கௌரி விசா​ரித்​து, “இந்து பட்​டியல் வகுப்​பைச் சேர்ந்த ஒரு​வர் கிறிஸ்தவ மதம் மாறி, கிறிஸ்​தவர் ஒருவரை திரு​மணம் செய்​து​கொண்​டதற்கு அனைத்து ஆவணங்​களும் உள்ள நிலை​யில், பட்​டியலின வகுப்​பைச் சேர்ந்​தவர் என்று கூறி வேட்​பு மனுத் தாக்​கல் செய்​த​போதே, அவரது வேட்​புமனுவை தேர்​தல் அதி​காரி​கள் தகுதி நீக்​கம் செய்​திருக்க வேண்​டும்.

ஒரு​வர் ஒரே நேரத்​தில் இரு சலுகைகளை அனுபவிக்​கக் கூடாது. இது அரசி​யலமைப்​புச் சட்​டத்தை ஏமாற்​றும் செய​லாகும். எனவே, அமு​தா​ராணி தலை​வர் பதவியி​லிருந்து தகுதி நீக்​கம் செய்​யப்பட வேண்​டும்” என்று உத்​தர​விட்​டார்.

இந்த உத்​தரவை எதிர்த்து அமுதா​ராணி மேல்​முறை​யீடு செய்​தார். இதை விசா​ரித்து நீதிப​தி​கள் ஜி.ஆர்.சுவாமி​நாதன், கே.​ராஜசேகர் அமர்வு பிறப்​பித்த உத்​தர​வில், இந்த வழக்​கின் உண்​மை​யான பிரச்​சினை அமு​தா​ராணி கிறிஸ்தவ மதத்தை ஏற்​றுக்​கொள்​கிறா​ரா, அவர் ஞானஸ்​நானம் பெற்​றாரா என்​பது​தான்.

மனு​தா​ரர் ஞானஸ்​நானம் பெற்​றுக்​கொண்​டது உறு​திப்​படுத்​தப்​படு​கிறது. ஒரு​வர் ஒரு மதத்​திலிருந்து மற்ற மதத்​துக்கு மாறு​வது என்​பது அரசி​யலமைப்​பின் அடிப்​படை உரிமை​யாகும். ஆனால், ஞானஸ்​நானத்​துக்​குப் பிறகு புதிய அடை​யாளத்தை மறைத்​து, அரசி​யலமைப்​புச் சட்​டம் வழங்​கி​யுள்ள உரிமை​களை அனுபவிக்​கும் நோக்​கத்​துக்​காக, பட்​டியல் இன சமூக நிலை​யில் தொடரும்​போது சிக்​கல் ஏற்​படு​கிறது.

இந்த வழக்​கில் மேல்​முறை​யீட்டு மனு​தா​ரர் கிறிஸ்தவ மதத்​தைத் தழுவி உள்​ளார் என்​பது ஆதா​ரங்​களு​டன் நிரூபிக்​கப்​பட்​டுள்​ளது. எனவே, தனி நீதிப​தி​யின் உத்​தரவு உறுதி செய்​யப்​பட்​டு, மேல்​முறை​யீட்டு மனு தள்​ளு​படி செய்​யப்​படு​கிறது.

இவ்​வாறு உத்​தர​வில் தெரி​வித்​துள்​ளனர்.

ஏற்கனவே,  கேரளத்தின் தேவிகுளம் சட்டமன்றத் தொகுதியில் இருந்து சிபிஐ(எம்) தலைவர் ஏ. ராஜா கிறிஸ்தவ மதத்திற்கு மாறியதாகவும், அதனால் அவர் பட்டியல் சாதியினருக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில் போட்டியிட முடியாது என்றும் கூறி அவரது தேர்தலை கடந்த  2025 ஆண்டு மே மாதம் உச்சநீதிமன்றம் ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.