சென்னை: டெல்​லி​யில்  ஆகஸ்டு 26ந்தேதி  நடை​பெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணை​யத்​தின் 43-வது கூட்​டத்​தில்,  தமழ்நாடு அரசு அடுத்த மாதம் (செப்​டம்​பர் மாதம்)  தமிழகத்​துக்கு வழங்க வேண்​டிய 37 டிஎம்சி நீரை  கர்நாடக அரசு விடு​விப்​பதை உறுதி செய்ய ஆணைய தலைவரிடம்  தமிழக அரசு சார்​பில் வலி​யுறுத்​தப்​பட்​டது.

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நேற்று நீர்வளத்துறை தலைவர் தலைமையில் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநிலங்களைச்சேர்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர். இதில் காவிரி நீர் இருப்பு, நீர் வெளியேற்றம் உள்படபல்வேறு தகவல்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது, தமிழ்நாடு அரசு தரப்பில், செப்டம்பர் மாததுக்கான தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தப்பட்டது.

இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறியிருப்பதாவது,  டெல்​லி​யில் எஸ்​.கே.ஹல்​தார் தலை​மை​யில் நடை​பெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணை​யத்​தின் 43-வது கூட்​டத்​தில் தமிழ்​நாடு உறுப்​பின​ரான நீர்​வளத்​துறை செயலர் ஜெ.ஜெய​காந்​தன், காவிரி தொழில்​நுட்​பக் குழும தலை​வர் இரா.சுப்​பிரமணி​யம் ஆகியோர் சென்னை தலை​மைச் செயல​கத்​தில் இருந்​த​படி காணொலிக் காட்சி வாயி​லாக பங்​கேற்​றனர்.

அப்​போது, மேட்​டூர் அணை​யின் நீர் இருப்பு அதன் முழு கொள்​ளள​வான 93.470 டிஎம்சி ஆக உள்​ளது. மேட்​டூர் அணை இந்த ஆண்டு ஐந்​தாவது முறை​யாக அதன் முழு கொள்​ளளவை எட்​டி​யுள்​ளது. தற்​போது அணைக்கு நீர்​வரத்து விநாடிக்கு 7,684 கனஅடி​யாக உள்ளது. அணையி​லிருந்து விநாடிக்கு 12,850 கனஅடி நீர் விவ​சா​யம், குடிநீர் மற்​றும் தொழிற்​சாலை பயன்​பாட்​டுக்​காக திறந்​து​விடப்படு​கிறது.

கர்​நாடக அணை​களின் நீர்​இருப்பு மற்​றும் நீர்​வரத்து கணிச​மான அளவு தொடர்ந்து வரு​வ​தா​ல். தமிழகத்​துக்கு இந்​தாண்டு செப்டம்பர் மாதத்​துக்கு வழங்​கப்பட வேண்​டிய நீர் அளவான 36.76 டிஎம்​சியை உச்ச நீதி​மன்ற உத்​தர​வின்​படி, பிலிகுண்​டுலு​வில் கர்​நாடகம் உறுதி செய்ய வேண்​டும்.

இவ்​வாறு  தெரிவிக்கப்பட்டுள்ளது.