சென்னை: சென்னை மாநகராட்சியின் 2 மண்டலங்களில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு ஒப்படைக்கும் சென்னை மாநகராட்சியின் நடவடிக்கைக்கு அனுமதி வழங்கியுள்ள சென்னை உயர்நீதிமன்றம், தூய்மை பணியாளர்கள் தற்போதும் வாங்கும் சம்பளத்தில் எத்த குறைப்பும் செய்யக்கூடாது என்றும் உத்தரவிட்டு உள்ளது.

மத்தியஅரசை தொடர்ந்து தமிழ்நாடு அரசும் பல்வேறு அரசு பணிகளை தனியாருக்கு தாரை வார்த்து வருகிறது. ஏற்கனவே பல்வேறு பணிகள் அவுட்சோர்சிங் முறையில் தனியாருக்கு தாரைவாக்கப்பட்டுள்ளது. அதுபோல போக்குவரத்து கழகங்களிலும் ஒப்பந்த முறையில் பணி நியமனம் மற்றும், தற்போதைய மின்சார பேருந்து முழுவதும் தனியார் நிறுவனத்திடம் கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும் பல பகுதிகளில் தூய்மை பணிகளும் தனியாரிடம் வழங்கப்பட்டு உள்ளது.
அதன் தொடர்ச்சியாக சென்னையில் உள்ள 11 மண்டலங்களில் ஏற்கனவே 11 மண்டலங்களில் தூய்மை பணிகள் தனியாரிடம் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்த மாதம் முதல் மேலும் 2 மண்டலங்களை தனியாருக்கு ஒதுக்கியது. இதுதொடர்பாக சென்னை மாநகராட்சியிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்து இரண்டு மண்டல தூய்மை பணியாளர்களும் போராட்டத்தில் குதித்தனர்.
சுமார் 13 நாட்கள் நடைபெற்ற அவர்களின் போராட்டத்தின்போது, திமுக அரசு தேர்தல் சமயத்தில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்றும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியதுடன், ஒரு கட்டத்தில் தங்கள் தற்போது ரூ. 23,000 ஊதியம் பெற்று வருகிறோம். ஆனால், தனியார் நிறுவனங்கள் 16,000 ரூபாயாக இதனால் குறைந்துவிடுகிறதுஎன்று தெரிவித்தனர்.
இநத் போராட்டத்தை எதிர்த்து காஞ்சிபுரத்தை சேர்ந்த திமுக பெண் பிரமுகர் ஒருவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், போராட்டக்காரர்களை அகற்ற உத்தரவிட்டது. இதையடுத்து, 13வது நாளான கடந்த புதன்கிழமை அன்று சென்னை மாநகராட்சிக்கு எதிரே போராட்டம் நடத்திவந்த தூய்மை பணியாளர்கள், வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டநர். மேலும் போராடியவர்களுக்கு ஆதரவாக போராடியவர்களும் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிகழ்வுக்கு ஆளும் கட்சியின் கூட்டணிக் கட்சிகள் உட்பட பல்வேறு கட்சிகளும் தங்கள் கண்டனத்தைத் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்து வந்த சென்னை உயர்நீதிமன்றம், சென்னை மாநகராட்சியில், தனியாருக்கு தாரைவார்ப்பது தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்டுள்ள உயர் நீதிமன்றம், தூய்மைப் பணியாளர்கள் கடைசியாக வாங்கிய சம்பளத்தை குறைக்காமல் வழங்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.
தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்கும் மாநகராட்சியின் தீர்மானத்தை ரத்து செய்யக் கோரி உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிபதி கே.சுரேந்தர் முன்பு இந்த வழக்கு விசாரணை ஏற்கெனவே நடந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், “தூய்மைப் பணியாளர்களை நிரந்தரம் செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கு தொழிலாளர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த சூழலில், தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்குவதாக இருந்தால் தொழிலாளர் நீதிமன்றத்தின் அனுமதியை பெற வேண்டும். மாநகராட்சியின் தீர்மானத்தால் சுமார் 2 ஆயிரம் ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது” என்று வாதிடப்பட்டது.
மாநகராட்சி தரப்பில், “சென்னை மாநகராட்சியில் உள்ள 5 மண்டலங்களில், ஏற்கெனவே 11 மண்டலங்களில் தூய்மைப் பணி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. தற்போது ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் துப்புரவு தொழிலாளர்களுக்கு தனியார் நிறுவனம் அதிக ஊதியத்துடன், வருங்கால வைப்புநிதி, காப்பீடு போன்ற சலுகைகளுடன் வேலை வழங்கும்” என்று தெரிவிக்கப்பட்டது.
ஒப்பந்த நிறுவனம் தரப்பில், “தூய்மைப் பணிகளை தனியாரிடம் ஒப்படைப்பது அரசின் கொள்கை முடிவு. இதில் விதிமீறல் இருந்தால் மட்டுமே நீதிமன்றம் தலையிட முடியும். 1,900 பணியாளர்கள் இன்னும் தேவை என்ற நிலையில் அவர்கள் பணியில் சேருவதற்கான காலக்கெடு ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கே.சுரேந்தர், துப்புரவு பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கும் சென்னை மாநகராட்சியின் தீர்மானத்தை ரத்து செய்ய முடியாது. தூய்மைப் பணியாளர்களை பணியில் சேர்த்துக் கொள்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்ற அச்சம் தேவையற்றது. எனவே, இது தொடர்பாக சென்னை மாநகராட்சி நிர்வாகம், தனியார் நிறுவனத்துடன் கலந்துபேசி, தூய்மைப் பணியாளர்கள் கடைசியாக பெற்ற ஊதியத்தை குறைக்காமல் வழங்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டு வழக்கை நீதிபதி முடித்துவைத்தார்.