டெல்லி: தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசு துணைத்தலைவர் வேட்பாளாராக அறிவிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் பாஜக மாநில தலைவரும், மகாராஷ்டிரா மாநில கவர்னருமான சி.பி.ராதாகிருஷ்ணன் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில், இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், பாஜக தலைமைமீது கொண்ட அதிருப்தி காரணமாக, கடந்த ஜூலை மாதம் 21ந்தேதி அன்று மாலை தனது பதவியை திடீடீரென ராஜினாமா செய்தார். இது டெல்லி அரசியலில் சலசலப்பைஏற்படுத்தியது. இதையடுத்து, அவரது இடம் காலியானதாக அறிவிக்கப்பட்டு தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
அதன்படி, குடியரசு துணைத் தலைவர் தேர்தல் செப்டம்பர் 9ம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், உடனே வாக்குகள் எண்னப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், வேட்பு மனுக்களை சமர்ப்பிக்கும் தேதி மற்றும் நேரம்: 21.08.2025 தேதிக்கு முன்னதாக காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை (பொது விடுமுறை நாள் தவிர) எந்த நாளிலும் தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த பாஜக தலைவர் குடியரசு துணைத்தலைவர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டு உள்ளார். இதையடுத்து, சி.பி.ராதாகிருஷ்ணன் டெல்லி சென்ற அவர் பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார். தொடர்ந்து நேற்று என்.டி.ஏ கூட்டாணியின் நாடாளுமன்ற குழு கூட்டம் நடைபெற்றது.
நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள நூலக கட்டிட அரங்கில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, சி.பி.ராதாகிருஷ்ணனை தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பிக்களுக்கு அறிமுகம் செய்துவைத்தார். குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை (ஆக.21) முடிவடையவுள்ள நிலையில், இன்று (ஆக.20) சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல் செய்தார்.

தேர்தல் நடத்தும் அதிகாரியான நாடாளுமன்ற செயலளரிடம் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்புமனு அளித்துள்ளார். அவருடன் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை ராஜ்நாத் சிங், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், அமைச்சர் கிரண் ரிஜிஜு, அதிமுக எம்.பி., தம்பிதுரை உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பிக்கள், பாஜக ஆளும் மாநில தலைவர்கள் என பலர் பங்கேற்றுள்ளனர்.
மேலும், சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பு மனுவுடன், முன்மொழிவு, வழிமொழிவு என பிரதமர் மோடி, அமைச்சர்கள் அமித்ஷா மற்றும் ராஜ்நாத் சிங் ஆகியோரும் எம்.பிக்கள் கையெழுத்து அடங்கிய 4 வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
குடியசு துணைத்தலைவர் தேர்தலில், சிபி.ராதாகிருஷ்ணனை எதிர்த்து, இண்டியா கூட்டணி சார்பில், ஒய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி சுதர்ஷனரெட்டி அறிவிக்கப்பட்டு உள்ளார். அவர் இன்று அல்லது நாளை வேட்புமனு தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
துணைகுடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடும் ரெட்டிக்கு ஆதரவு! முதலமைச்சர் ஸ்டாலின்…