பெங்களூரு

பெங்களூரு ச்றப்பு நீதிமன்றம் ந்டிகை ரன்யா ராவுக்கு தங்கக் கடத்தல் வழக்கில் ஒராண்ட் சிறை தண்டனை விதித்துள்ளது.

கர்நாடக மாநில டிஜிபி ராமசந்​திர ராவின் வளர்ப்பு மகளும், நடிகை​யு​மான‌ ரன்யா ராவ் (32) துபா​யில் இருந்து 14.8 கிலோ தங்​கம் கடத்தி வந்​த​தாக‌ கடந்த மார்ச்​சில் பெங்​களூரு சர்​வ​தேச விமான நிலை​யத்​தில் கைது செய்​யப்​பட்​டார். மேலும் அவரது வீட்​டில் நடத்​திய சோதனை​யில் ரூ.2.8 கோடி மதிப்​பிலான தங்​க​மும், ரூ.2.4 கோடி ரொக்​க​மும் சிக்​கின.

எனவே வரு​வாய் புல​னாய்வு இயக்​குநரக அதி​காரி​கள், அவர் மீது சட்​ட​விரோத தங்க கடத்​தல் மற்​றும் அந்​நிய செலா​வணி மோசடி ஆகிய சட்​டப்​பிரிவு​களில் வழக்​குப்​ப​திவு செய்​தனர். பெங்​களூரு​வில் உள்ள பொருளா​தார குற்​றங்​களுக்​கான சிறப்பு நீதி​மன்​றத்​தில் இவ்​வழக்கு நடை​பெற்று வந்​தது.

நேற்று நீதி​மன்​றம்,

”தங்க கடத்​தல் வழக்​கில் ர‌ன்யா ராவ் மீதான குற்​றச்​சாட்​டு​கள் வரு​வாய் புல​னாய்வு இயக்​குநரக அதிகாரி​கள் தரப்​பில் ஆதா​ரத்​துடன் நிரூபிக்​கப்​பட்​டுள்​ளன. எனவே அவருக்கு சட்​ட​விரோத தங்க கடத்​தல் மற்​றும் அந்​நிய செலா​வணி மோசடி ஆகிய சட்​டப்​பிரிவு​களின்​கீழ் ஓராண்டு சிறை தண்​டனை விதிக்​கப்​படு​கிறது”

என்று உத்​தர​விட்​டது.

வரு​வாய் புல​னாய்வு இயக்​குநரக அதி​காரி ஒரு​வர் கூறுகை​யில், ரன்யா ராவிஇந்த பிரி​வின்​கீழ் தண்​டிக்​கப்​பட்​டுள்​ள​தால் ஓராண்​டுக்கு ஜாமீனில் வெளியே வர முடி​யாது என தெரி​வித்​தார். ஆனால் ரன்யா ராவ் தரப்​பில், இந்த தீர்ப்பை எதிர்த்து கர்​நாடக உயர் நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்​ய இருப்​ப​தாக தெரிவித்​தனர்.