துரை

காவலர்கள் தாக்கியதால் உயிரிழந்த அஜித்குமாரின் சகோதரர் தனக்கு மதுரை நகரிலேயே அரசுப்பணி வேண்டும் எனக் கூறியுள்ளார்.

நேற்று காவல்துறையால் தாக்கப்பட்டஅஜித்​கு​மார் உயி​ரிழப்பு தொடர்​பான வழக்கு விசாரணை உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் நடைபெற்​ற​போது “நவீன்​கு​மாருக்கு வழங்​கப்​பட்ட ஆவின் பணி, அரசுப் பணி​யல்ல” என்று தெரிவிக்​கப்​பட்டதற்கு நீதிப​தி​கள், “ஆவின் அரசின் கட்​டுப்​பாட்​டில் உள்ள நிறு​வனம்​தான்” என்​றனர்​.

வழக்கு விசாரணைக்கு வந்திருந்த அஜித்​கு​மாரின் சகோ​தரர் நவீன்​கு​மார், செய்தி​யாளர்​களிடம்.

”நகை திருட்டு புகார் தொடர்பாக எனது சகோதரர் அஜித்குமாரை மட்டுமின்றி, என்னையும் போலீஸார் கடுமையாக தாக்கினர். போலீஸாரின் தாக்குதலால் அஜித்குமார் உயிரிழந்த நிலையில், எனக்கும் அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

தமிழக அரசால் தற்போது எனக்கு காரைக்​குடி ஆவினில் வேலைவாய்ப்பு வழங்​கப்​பட்​டுள்​ளது. இது அரசு வேலை இல்​லை. மேலும், ஆவின் அலு​வல​கம் 80 கி.மீ. தொலை​வில் உள்ளது. எனவே, மதுரை​யிலேயே அரசுத் துறை​யில் பணி வழங்க வேண்​டும்.

வளர்ச்சியடை​யாத பகு​தி​யில் எங்​களுக்கு வீட்​டு மனை பட்டாவழங்​கப்​பட்​டுள்​ளது. அதி​லும் எங்​களுக்கு திருப்தி இல்​லை. அஜித்​கு​மார் உயி​ரிழப்​பில் சம்​பந்​தப்​பட்ட காவல் துறை உயர் அதி​காரி​களுக்​கும் தக்க தண்டனை பெற்​றுத்தர வேண்​டும்.”

என்று கூறியுள்ளார்.