தமிழ்நாட்டில்,  திமுக அரசு, உலக யோகா தின நிகழ்ச்சியில்  ஆர்வம் காட்டாத நிலையில், மாநில கவர்னர் ஆர்.என்.ரவி,  பொதுமக்கள் யோகா தினத்தை சிறப்பிக்க வேண்டும் என்றும், அனைவரும் யோகா பயிற்சி செய்ய வேண்டும் என்று கவர்னர் கேட்டு கொண்டார். அதன்படி இன்று மதுரையில் கவர்னர் தலைமையில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.

உலக யோகா தினம் அறிவிக்கப்பட்டு, 10 ஆண்டுகளை நிறைவு செய்ததை குறிக்கும் வகையில், இந்த ஆண்டுக்கான கருப்பொருள் ஒரே பூமி, ஒரே ஆரோக்கியத்திற்கான யோகா என்று கொண்டாடப்படுகிறது. இந்த 11-வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, அனைவரும் யோகா பயிற்சி செய்ய வேண்டும் என்று கவர்னர்  ஏற்கனவே கேட்டு கொண்டிருந்தார்.

இதைத்தொடர்ந்து,  தமிழ்நாடு கவர்னர் மாளிகை, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்து, 2025 சர்வதேச யோகா தின நிகழ்விற்காக நிறுவனங்கள், மையங்கள், அமைப்புகள், நிர்வாக துறைகள், கிராமங்கள், வேளாண் அறிவியல் மையங்கள், விவசாயிகள், மீனவர்கள், கைவினைஞர்கள் தவிர பிற பிரிவுகள் உள்பட பல்வேறு துறைகளிலும் பரவலான பங்கேற்பை செயல்படுத்த, ஒரு பிரத்யேக https://events.annauniv.edu/ என்ற இணையவழி சேவையை தொடங்கி யது. அதனப்டி,  யோகா பயிற்சியில் பங்கேற்க விரும்புபவர்கள் தங்கள் விவரங்களை, இணையவழி வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம் என  கவர்னர் மாளிகை தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்று  காலை மதுரையில் பிரமாண்டமாக யோகா  நிகழ்ச்சி நடைபெற்றது.  அதன்படி மதுரையில் வேலம்மாள் கல்வி அறக்கட்டளை ஏற்பாடு செய்த பிரமாண்டமான யோகா நிகழ்வில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி யோகா அமர்வில் பங்கேற்றார். இதில் பல ஆயிரம் பேர் கலந்துகொண்டனர்.

 

உலக யோகா தினம்: 3லட்சம் பேருடன் விசாகப்பட்டினத்தில் யோகா பயிற்சியில் ஈடுபட்டார் பிரதமர் மோடி! வீடியோ