விசாகப்பட்டினம்: இன்று உலக யோகா தினம் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அவருடன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்பட சுமார் 3 லட்சம் பேர் பங்கேற்றனர். இது கின்னஸ் சாதனையாக கருதப்படுகிறது.
உத்தகாண்டில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு கலந்துகொண்டு யோகா செய்தார். அதுபோல நாடு முழுவதும் மாநில முதல்வர்கள், மத்திய மாநில அமைச்சர்கள், முப்படைகளைச் சேர்ந்த ராணுவத்தினர், மற்றும் சமுக நல அமைப்புகள் சார்பிலும் நாடு முழுவதும அனைத்து தரப்பினரும் இன்று யோகா செய்து உலக யோக தினத்தை சிறப்பித்து வருகின்றனர்.
ஜூன் 21 சர்வதேச யோகா தினம்) கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் ஒரு லட்சம் இடங்களில் ஒரே நேரத்தில் யோகா நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. தனிநபரின் ஆரோக்கியம், சர்வதேச நிலைதன்மை என்ற உயர்நிலையை யோகா கொண்டிருக்கிறது என்ற செய்தியை பிரதிபலிக்கும் வகையில் ‘ஒரே புவி, ஒரே ஆரோக்கியம்’ என்ற கருத்தாக்கத்தின் கீழ் இந்த ஆண்டு சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது.
இந்த தினத்தின் முக்கிய நிகழ்வு, ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் உள்ள ஆர்.கே. கடற்கரை சாலையில் இன்று காலை 6:20 மணியளவில் தொடங்கியது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, மத்திய ஆயுஷ் துறை மற்றும் சுகாதாரத் துறை இணையமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் சுமார் 3 லட்சம் பேர் பங்கேற்று யோகா செய்தனர். இதனை கின்னஸ் சாதனையாக கருதப்படுகிறது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பல்வேறு சமூக அமைப்புகள், ஒருங்கிணைப்பு அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஒரே நேரத்தில் யோகா பயிற்சிகளை மேற்கொண்டனர்.
‘யோகா சங்கம்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நிகழ்வில் முன்னெப்போதும் இல்லாத வகையில் நாட்டின் பல பகுதிகளில் பல்வேறு தரப்பினர் பெரிய அளவில் பங்கேற்றனர்.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பஞ்சாயத்து அமைப்புகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் எழுதியிருந்த கடிதத்தில், யோகா தின நிகழ்வுகளில் தங்கள் பகுதிகளில் உள்ள மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்பதை ஊக்குவிக்கும்படி வேண்டுகோள் விடுத்திருந்தார். அவரது வேண்டுகோளை ஏற்று, நாடு முழுவதும் உள்ள பஞ்சாயத்து அமைப்புகள் சிறப்பு யோகா நிகழ்வுகள், சமூக அளவில் மக்கள் தொடர்பு நிகழ்வுகள், பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், பொது இடங்கள் உள்ளிட்டவற்றில் பொதுவான யோகா மரபு பயிற்சிகளுக்கு இன்று ஏற்பாடு செய்துள்ளன.
விசாகப்பட்டினத்தில் யோகா பயிற்சி நிறைவடைந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பாளர்களுடன் கலந்துரையாடினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், ‘ “யோகா வயது, பின்னணி அல்லது எல்லைகளுக்கு அப்பாற்பட்ட அனைவருக்கும் பொதுவானது” என்பதை உலக நாடுகளுக்கு எடுத்துரைத்தார்.