ஜூன் 5 ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஒரு லட்சம் பூர்வீக இன மரக்கன்றுகளை நட GCC திட்டமிட்டுள்ளது.
மாநகராட்சியால் பராமரிக்கப்படும் அனைத்து பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் மயான பூமிகளில் பூர்வீக மரக்கன்றுகளை நடவும், நகர பூங்காக்களை புதுப்பிக்கவும் மேம்படுத்தவும் டெண்டர்களை கோரவும் பெருநகர சென்னை மாநகராட்சி (GCC) தயாராக உள்ளது.

நகரின் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் விரிவாக்கப் பணிகளுக்காக மரங்கள் வெட்டப்பட்ட நிலையில் வெப்ப அலைகளிலிருந்து தப்பிக்க ஒரு தடையை உருவாக்கவும், இயற்கை மற்றும் சுற்றுச்சூழலை புதுப்பிக்கவும், உலக சுற்றுச்சூழல் தினத்தன்று இந்த மரக்கன்றுகளை நட திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக ரூ.1.83 கோடி மதிப்பளவிலான பூர்வீக மரக்கன்றுகளை ஓராண்டுக்கு வழங்க கடந்த வாரம் டெண்டர் வெளியிடப்பட்டது.
தோட்டக்கலையில் அனுபவம் உள்ளவர்களிடம் இருந்து இந்த பூர்வீக மரக்கன்றுகளை வாங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த மரக்கன்றுகளை சொட்டு நீர் பாசனம் மூலம் வளர்க்க முடிவெடுத்துள்ள அதிகாரிகள் அதனை ஒரு காலக்கெடுவுக்குள் இல்லாமல் படிப்படியாக நட திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
நீர்மருது (டெர்மினாலியா அர்ஜுனா), பூவரசு (தெஸ்பெசியா பாப்புல்னியா), சரகொண்டை (காசியா ஃபிஸ்துலா), ஜாமுன் செடி மற்றும் பல பூர்வீக இனங்கள் இந்த திட்டத்தின் கீழ் நடப்படும் என்று கூறப்படுகிறது.
அதேபோல், மண்டல அளவில் சேதமடைந்த பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் குறித்து அதிகாரிகளுக்கு புகார்கள் வந்ததை அடுத்து, பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களை புதுப்பிக்கவும் மேம்படுத்தவும் ரூ.22.12 கோடி மதிப்புள்ள டெண்டர்கள் (பல்வேறு மண்டலங்களுக்கான பல தொகுப்புகள்) விடப்பட்டுள்ளன.
நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மைலாப்பூரில் உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவை புதுப்பிக்க ரூ.11.64 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளையில், ஒரு காலத்தில் பச்சைப் பசேலென்று பூத்துக் குலுங்கிய அண்ணா நகர் டவர் பூங்கா, ஷெனாய் நகர் திரு.வி.க. பூங்கா மற்றும் ஷெனாய் நகர் பூங்கா உள்ளிட்ட பூங்காக்களை மேம்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.