ஸ்ரீநகர்

ஜம்மு காஷ்மீரில் பய்ங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்  26 பேர் கொல்லப்பட்டதற்கு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரர்கள் போல சீருடை அணிந்து வந்த பயங்கரவாதிகள், சுற்றுலாப்பயணிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்து பலர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியை சுற்றி வளைத்துள்ள பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, அமித்ஷா, வெளியுறவுத்துறை அமைசச்ர் ஜெய்சங்கர் உள்பட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி திரவுபதி முர்மு:

காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. இது ஒரு கொடூரமான மற்றும் மனிதாபிமானமற்ற செயலாகும். சுற்றுலா பயணிகளை தாக்குவது என்பது கொடூரமானது மற்றும் மன்னிக்க முடியாதது. உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும்.

வெளியுறவு மஅமைச்சர் ஜெய்சங்கர்;

பகல்காமில் நடந்த கோழைத்தனமான தாக்குதலுக்கு கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். பாதிக்கப்பட்டவர்கள் குறித்தே எனது எண்ணம் உள்ளது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.

 எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி:

காஷ்மீர் தாக்குதல் சம்பவம் இதயத்தை நொறுக்குவதாக அமைந்துள்ளது. .பயங்கரவாதத்திற்கு எதிராக ஒட்டு மொத்த நாடும் ஒன்றுபட்டு உள்ளது. காஷ்மீரில் அமைதியான சூழ்நிலை நிலவுகிறது எனக் கூறுவதை விட்டுவிட்டு, மத்திய அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதன் மூலம் இந்த கொடூரமான சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்கும். அப்பாவி இந்தியர்கள் உயிர் இழக்க மாட்டார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் ஆளுநர் மனோஜ் சின்ஹா

தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ஒட்டுமொத்த நாடும் கோபத்தில் உள்ளது. வீரர்களின் ரத்தம் கொதிக்கிறது. இந்த கொடூரமான செயலுக்கு காரணமானவர்கள் கடுமையான விலை கொடுப்பார்கள் எனு உறுதி அளிக்கிறேன்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

“ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் அப்பாவி சுற்றுலாப் பயணிகளிள் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் மனசாட்சியை உலுக்கும் காட்டுமிராண்டித்தனமான செயல், இது கடும் கண்டனத்திற்கு உரியது. உயிரிழந்தவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களும் உள்ளனர் என்பது வருத்தம் அளிக்கிறது. காஷ்மீர் அரசுடன் ஒருங்கிணைந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை செய்ய டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்”