சிறுபான்மை இனத்தவரைப் பாதுகாக்கத் தவறி வருவதாக, வங்காளதேச இடைக்கால அரசுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் இந்து மதத் தலைவர் படுகொலைச் செய்யப்பட்ட விவகாரத்தை அடுத்து இந்திய வெளியுறவு அமைச்சும் பங்களாதேஷை கடுமையாக சாடியுள்ளது.

இந்துக்கள் உட்பட அனைத்து சிறுபான்மை மக்களையும் காக்க வேண்டியது இடைக்கால அரசின் கடமையாகும்.
அதை விடுத்து ஒவ்வொரு முறையும் சாக்குப் போக்குகளைச் சொல்லி தட்டிக் கழிப்பது கூடாது என மத்திய அரசு கண்டித்துள்ளது.
வட வங்காள தேசத்தில் செல்வாக்குமிக்க இந்துச் சமூகத் தலைவரான பாபேஷ் சந்திர ராய் மர்ம நபர்களால் கடத்திச் செல்லப்பட்டு கொல்லப்பட்டார்.
பங்களாதேஷில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் நெருக்கடி தணிந்துள்ள போதிலும் இந்துக்கள் மீதான வன்முறை தாக்குதல் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.