கொழும்பு
இலங்கை அதிபர் அதுர குமார திசநாயக டிசம்பர் 15 அன்று இந்தியா வருகிறார்

இலங்கையில் கடந்த செப்டம்பரில் நடந்த அதிபர் தேர்லில் தேசிய மக்கள் சக்தி கூட்டணி வேட்பாளர் அநுர குமார திசாநாயக வெற்றி பெற்று புதிய அதிபராகப் பதவியேற்றார். கடந்த நவம்பரில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், தேசிய மக்கள் சக்தி கூட்டணி அபார வெற்றி பெற்றது.
இலங்கை தலைநகர் கொழும்பில் சுகாதாரத் துறை அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ செய்தியாளர்களிடம்,,
”அதிபர் அநுர குமார டிச.15 முதல் 17-ஆம் தேதி வரை, 2நாள் பயணமாக இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்தப் பயணத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோரை அவர் சந்திக்க உள்ளார். அவருடன் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் விஜித ஹேரத், இணை அமைச்சர் அனில் ஜயந்த பொனாண்டோ ஆகியோரும் செல்ல உள்ளனர்’
என்று தெரிவித்துள்ளார்.
இருநாடுகள் இடையே நிலவும் மீனவர்கள் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்தும். எதிர்கால திட்டங்கள் பற்றியும் இந்தச் சந்திப்பின்போது ஆலோசிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
[youtube-feed feed=1]