இலங்கையில் பெய்து வரும் தொடர் கனமழைக்கு 2 குழந்தைகள் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக இலங்கையில் கனமழை பெய்து வருகிறது, குறிப்பாக அந்நாட்டின் கிழக்கு கடலோர பகுதிகளில் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் உள்ள நல்லூர் கந்தசாமி கோயில் நீரில் மூழ்கியுள்ளது.
கனமழை காரணமாக பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளத்தால் 2 குழந்தைகள் உட்பட 4 பேர் உயிரிழந்த நிலையில் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட மேலும் சிலரை தேடும் பணி நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
Patrikai.com official YouTube Channel