சுமத்ரா

நேற்று இந்தோனேசியாவில் உள்ள எரிமலை ஒன்று வெடிடித்து சிதறி உள்ளது.

பல எரிமலைகள் பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் அமைந்திருப்பதால் இந்தோனேசியாவில் செயல்படும் எரிமலைகளில் சுமத்ரா மாகாணத்தில் உள்ள மராபி எரிமலை குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

மலையேற்ற வீரர்கள் சாகசத்தில் ஈடுபடுவதால் இது மிகவும்  சிறந்த சுற்றுலா தலமாகவும் திகழ்கிறது. நேற்று மராபி எரிமலை பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறி சுமார் 6 ஆயிரத்து 500 அடி உயரத்துக்கு கரும்புகை வெளியேறியது.

அந்தப் பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாக காட்சியளித்தது. இந்த எரிமலையை சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்