கனமழை காரணமாக சென்னை உயர்நீதிமன்றத்துக்கு நாளை (அக். 16) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் இந்த மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுக்கு ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக உயர்நீதிமன்ற பதிவாளர் அல்லி அறிவித்துள்ளார்.