டாக்கா

ங்க தேச இடைக்கால அரசு தற்போது ஷேக் ஹசீனா எங்குள்ளார் என்பது தெரியவில்லை என அறிவித்துள்ளது.

வங்க தேசத்தில் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் அரசுக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் ஏறக்குறைய 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதையொட்டி தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு, டாக்காவில் இருந்து சகோதரியுடன் ஹசீனா வெளியேறினார்.

அவர் இந்தியாவில் தஞ்சமடைந்து சில நாட்கள் தங்கியிருந்த பின்னர் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சென்றதாக தகவல்கள் வெளியானது.

உள்நாட்டு போராட்டங்களால் பதவியில் இருந்து விலகி, நாட்டை விட்டு தப்பிய முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தற்போது எங்கே இருக்கிறார் என்பது தெரியவில்லை என அந்நாட்டு இடைக்கால அரசின் வெளியுறவு ஆலோசகர் தொஹித் ஹொசைன் தகவல் தெரிவித்துள்ளார்.

ஷேக் ஹசீனா குறித்து இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீர அரசிடம் கேட்டதாகவும், உரிய பதில்கள் கிடைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்