சிங்கப்பூர்

சிங்கப்பூர் நீதிமன்றம் இந்திய வம்சாவளி முன்னாள் அமைச்சருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதித்துள்ளது.

சென்னையில் கடந்த 1962 ஆம் ஆண்டு பிறந்த ஈஸ்வரன் சிறுவயதிலேயே சிங்கப்பூரில் குடியேறி 1997 ஆம் ஆண்டு அந்த நாட்டு எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டார். 2006-ல் லீ ஹெய்ன் லூங்கின் அமைச்சரவையில் இடம்பெற்றார்.

இவர் வர்த்தக உறவுகளுக்கான மந்திரியாகவும், போக்குவரத்துத்துறை மந்திரியாகவும் பதவி வகித்தபோது  தொழிலதிபர்களிடம் இருந்து, 4,00,000 சிங்கப்பூர் டாலர் மதிப்புள்ள பரிசுப் பொருட்களை பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்து. வழக்குப்பதிவு செய்யப்பட்டு, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

தன்னுடைய அமைச்ச்ர் பதவியை ராஜினாமா செய்த ஈஸ்வரன், அதன் பிறகு, தன் மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று நிரூபிப்பேன் என கூறி வந்தார். இறுதியாக அவர் தன் மீதான 35 குற்றச்சாட்டுகளில் 5ல் குற்றத்தை ஒப்புக் கொண்டார்.

நீதிமன்றம் பரிசு பொருட்களை பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில் மட்டும் அவர் குற்றவாளி என்று உறுதி செய்ததுடன்முன்னாள் அமைச்ச்ர் ஈஸ்வரனுக்கு 12 மாதம் சிறை தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்துள்ளது.