மெக்சிகோ

மெக்சிகோ நாட்டின் முதல் பெண் அதிபராக நோபல் பரிசு பெர்ற ஷின்பாம் பதவி ஏற்றுள்ளார்.

கடந்த ஜூன் மாதம் வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் மெக்சிகோவின் ஆளுங்கட்சியான மொரேனா கட்சி (இடதுசாரி) சார்பில் அதிபர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட கிளாடியா ஷீன்பாம், ஏறக்குறைய 60 சதவீத வாக்குகளைப் பெற்று, அசைக்க முடியாத முன்னிலையுடன் வெற்றி பெற்றார்.

சுமார்3 மாதங்களுக்கு பிறகு நடந்த பதவியேற்பு விழாவில் மெக்சிகோ நாட்டின் முதல் பெண் அதிபராக கிளாடியா ஷீன்பாம் பதவியேற்றுக்கொண்டார். இந்த விழாவில் அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடனின் மனைவியும் அமெரிக்காவின் முதல் பெண்மணியான ஜில் பைடன், பிரேசில் அதிபர் லூலா டா சில்வா ஆகியோர் கலந்து கொண்டனர்.

கடந்த 2007-ம் ஆண்டு உலக அளவில் புகழ் பெற்ற காலநிலை ஆராய்ச்சியாளரான ஷீன்பாம், அமைதிக்கான நோபல் பரிசை பெற்றவராவார். மேலும் 2018-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று மெக்சிகோ நகரின் முதல் பெண் மேயர் என்ற பெருமையையும் பெற்ரு கடந்த 2000-ம் ஆண்டில் இருந்து 2006 வரை நாட்டின் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இவா் பொறுப்பு வகித்துள்ளார்.