லுசிகி

நேற்று முன்தினம் இரவு தென் ஆப்ரிக்காவில் நடந்த துப்பாக்கி சூட்டில் 17 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு தென் ஆப்பிரிக்காவின் கிழக்கு கேப் மாகாணம் லுசிகி நகரில் துப்பாக்கி சூடு நடைபெற்றது.

நேற்று முன்தினம் அந்நகரில் அருகருகே உள்ள 2 வீடுகளில் அடுத்தடுத்து துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்தில் 12 பெண்கள் உள்பட 17 பேர் உயிரிழந்தனர்.

அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பியோடிய நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

முதற்கட்ட தகவலில் குடும்ப நிகழ்ச்சியின்போது இந்த துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்றதாக தெரிய வந்துள்ளது