டோக்யோ

ன்று அதிகாலை ஜப்பானில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்ட்ள்ளது.

இன்று அதிகாலை ஜப்பானின் தொலைதூர தீவான இசு தீவுகளுக்கு அருகே ஏற்பட்டுள்ள நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 5.6 ரிக்டர் ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் உடனடியாக வெளியாகவில்லை.

நிலநடுக்கத்தை தொடர்ந்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் மற்றும் உள்ளூர் வானிலை அதிகாரிகள் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஜப்பான் நான்கு பெரிய டெக்டோனிக் தட்டுகளின் மேல் ஜப்பான் நிலப்பரப்பு அமைந்துள்ளதால், அந்நாடு ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1,500 நிலநடுக்கங்களை எதிர்கொள்கிறது. அவற்றில் பெரும்பாலானவை சிறிய அளவில் ஏற்படுகிறது.

மேம்பட்ட கட்டிட நுட்பங்கள் மற்றும் நன்கு நடைமுறைப்படுத்தப்பட்ட அவசரகால நடைமுறைகள் காரணமாக பெரிய நடுக்கம் ஏற்பட்டாலும் இங்கு பாதிப்பு கட்டுப்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.