நைபியடாவ்

மியான்மர் நாட்டில் வீசிய யாகி புயலால் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

யாகி சூறாவளிப் புய தென்சீன கடலில் உருவாகி பிலிப்பைன்ஸ், தெற்கு சீனா, வியட்நாம், லாவோஸ் மற்றும் மியான்மர் நாடுகளை கடுமையாக தாக்கியது. இதை தொடர்ந்து ஏற்பட்ட கனமழை மற்றும் அதன் தொடர்ச்சியாக, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஆகியவை ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை மாறிப் போனது.

மியான்மரில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி குறைந்தது 226 பேர் பலியாகி 77 பேர் காணாமல் போயுள்ளதாக அரசு ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன.  மேலும் மியான்மர் உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்ட பகுதிகளுடனான தகவல் தொடர்பு சிக்கல்கள் காரணமாக, உயிரிழப்பு எண்ணிக்கை மெதுவாக உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக யாகி புயல் வியட்நான், வடக்கு தாய்லாந்து மற்றும் லாவோசைத் தாக்கியதில் வியட்நாமில் கிட்டத்தட்ட 300 பேரும், தாய்லாந்தில் 42 பேரும், லாவோசில் 4 பேரும் உயிரிழந்ததாக தென்கிழக்கு ஆசிய நாடுகளின் ஒருங்கிணைப்பு மையம் தெரிவித்துள்ளது.