மேற்கு பாம் பீச்

மெரிக்க முன்னாள் அதிபரும் தற்போதைய அதிபர் தேர்தல் வேட்பாளருமான டொனால்ட் டிரம்ப் மீது மீண்டும் கொலை முயற்சி நடந்துள்ளது.

வரும் நவம்பரில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது., அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் குடியரசு கட்சியின் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டு உள்ளார். டிரம்பை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.

அமெரிக்காவின் பென்சில்வேனியாவின் பட்லர் பகுதியில் நடந்த பேரணியில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் பங்கேற்றபோது, டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டி துப்பாக்கி சூடு நடத்திய நபர் சுட்டு கொல்லப்பட்டார். அவருடைய வலது காதின் மேல் பகுதியை துப்பாக்கி குண்டு துளைத்து சென்றதால் இந்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது.

நேற்று டிரம்ப், மேற்கு பாம் பீச் பகுதியில் உள்ள டிரம்ப் சர்வதேச கோல்ப் கிளப்புக்கு சென்று, கோல்ப் விளையாடி கொண்டு இருந்துள்ளபோது, திடீரென அவருடைய பார்வைக்கு உட்பட்ட தொலைவில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு உள்ளது. எனவே அவர் பாதுகாப்பான பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டார். இதை டிரம்ப் பிரசார அமைப்பின் செய்தி தொடர்பாளரான ஸ்டீவன் சீயங் அறிவித்துள்ளார்.