ரோடு

மிழக அமைச்சர் முத்துசாமி தமிழகத்தில் மதுவிலக்கு அமலாகுமா என்பதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

அடுத்த மாதம் 2 ஆம் தேதி விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில், கள்ளக்குறிச்சியில் மது-போதை பொருட்கள் ஒழிப்பு மாநாடு நடத்தப்படுகிறது. மாநாட்டில் அ.தி.மு.க.வும் பங்கேற்கலாம் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். தி.மு.க. கூட்டணியில் இருக்கும் திருமாவளவன், மது ஒழிப்பு மாநாட்டிற்கு அ.தி.மு.க.வை அழைத்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.

இன்று ஈரோட்டில் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களை சந்தித்தார். செய்தியாளர்கள் அப்போது விசிக மாநாடு குறித்தும், மதுவிலக்கு குறித்தும் அமைச்சரிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பியதற்கு அமைச்சர் பதில் அளித்துள்ளார்.

அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களிடம்

“விடுதலை சிறுத்தைகள் கட்சி தி.மு.க அரசை எதிர்த்து மாநாடு நடத்தவில்லை, மாறாக கொள்கை ரீதியான முடிவுக்காக நடத்துகின்றனர். விசிக மாநாட்டில் அதிமுக பங்கேற்கலாம் என பொதுவான அழைப்பைதான் திருமாவளவன் விடுத்துள்ளார்.

தமிழகத்தி மதுக்கடைகள் தொடர்ந்து செயல்படுவதில் முதல்வருக்கு எள்ளளவும் விருப்பம் இல்லை. முதல்வர் மதுக்கடைகளை என்றாவது ஒருநாள் மூடவேண்டும் என்றே நினைக்கிறார்.

முதல்வர் உத்தரவு போட்டு மதுக்கடைகளை மூடினால் என்ன நடக்கும் என்பதை ஆராய்ந்து தான் நடவடிக்கை எடுக்க முடியு?.  சூழலை பொறுத்து, அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை கொண்டு வருவோம்.”

என்று விளக்கம் அளித்துள்ளார்.