டெல்லி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரான சீதாராம் யெச்சூரி கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

72வயதாகும் சீத்தாராம் யெச்சூரி   கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில்,  டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரை ஐசியுல் சேர்த்துமருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்துள்ளனர். இந்த நிலையில், அவரது உடல்நிலை மோசமடைந்து வருவதாகவும், அதனால்  வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூத்த கம்யூனிஸ்டு தலைவரான சீதாராம் யெச்சூரி (வயது 72) கடந்த ஆகஸ்ட் 19ம் தேதி மருத்துவமனையில் நெஞ்சு வலி  காரணமாக டெல்லி எய்ம்ஸ்-ல் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நடத்தப்பட்ட உடல் பரிசோதனையின்போது, அவருக்கு நிமோனியா தொற்றும் பாதிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து,அவரை ஐசியு-வில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்த நிலையில், அவரது உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த  மூன்று நாட்களாக அவரது உடல்நிலை மேலும் மோமடைந்து உ  கவலைக்குரிய வகையில் அமைந்துள்ளது. இதனால், அவர் ஐ.சி.யு.வில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது அரசியல் கட்சி தலைவர்கள்,  மார்க்சிஸ்ட் தொண்டர்களிடையே  பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீத்தாராம் யெச்சூரி:

1952ம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி பிறந்த சீதாராம் யெச்சூரி சென்னையில் பிறந்தவர். ஆந்திராவில் வளர்ந்த இவர் டெல்லியில் தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்தார். முதுகலை பொருளாதார படிப்பை டெல்லியில் உள்ள புகழ்பெற்ற ஜே.என்.யு. பல்கலைக்கழகத்தில் முடித்த அவர் பொருளாதாரத்தில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.

படிக்கும் காலத்தில் இருந்தே மாணவர் அமைப்பில் தீவிரமாக செயல்பட்டு வந்த சீதாராம் யெச்சூரி, மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்து தீவிரமாக பணியாற்றினார். ராஜ்யசபா உறுப்பினராக 2005ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை பதவி வகித்துள்ளார். நாட்டின் முக்கியமான எதிர்க்கட்சித் தலைவர்களில் ஒருவராக திகழும் சீதாராம் யெச்சூரி, பிரபல பத்திரிகையாளர் சீமா சிஸ்தியை திருமணம் செய்துள்ளார். இவரது மகன் ஆஷிஷ் யெச்சூரி கடந்த 2021ம் ஆண்டு கொரோனாவில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மகள் அகிலா வெளிநாட்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியையாக பணியாற்றுகிறார்.