சென்னை

ரும் 14 ஆம் தேதி அன்று தமிழகத்தில் தே மு தி க முப்பெரும் விழா நடத்த உள்ளது.

நேற்று தே மு தி க பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

”வரும் 14 ஆம் தேதி அன்று தே.மு.தி.க.வின் 20-ம் ஆண்டு தொடக்க நாள் முப்பெரும் விழாவாக தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாடப்பட உள்ளது.

இந்த முப்பெரும் விழா பத்மபூஷன் விருதுக்காக விஜயகாந்தை கவுரவிக்கும் விழா, 20-ம் ஆண்டு கட்சியின் தொடக்க நாள் விழா, விஜயகாந்தின் 72-வது பிறந்தநாள் விழா ஆகியவற்றுக்காக நடைபெற உள்ளது.

இதையொட்டி தொண்டர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி முப்பெரும் விழா பொதுக்கூட்டம் நடத்தப்பட வேண்டும்.மேலும் அனைத்து மாவட்டங்களிலும் முறையாக போலீஸ் அனுமதி பெற்று முப்பெரும் விழா பொதுக்கூட்டம் நடத்த வேண்டும்”

என்று தெரிவித்துள்ளார்.