சென்னை

மிழக முதல்வர் மு க ஸ்டாலின்  இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள மீனவர்களை மீட்க வேண்டும் என மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இன்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு  எழுதியுள்ள கடிதத்தில்,

“நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 11 மீனவர்களும் அவர்களது மீன்பிடி விசைப்படகும் நேற்று இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ள சம்பவம் மிகுந்த கவலையளிக்கிறது. நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 11 மீனவர்கள் IND-TN-06-MM-1054 என்ற பதிவெண் கொண்ட விசைப்படகில் கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது நேற்று  இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.

நான் இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருவதை, ஏற்கனவே பலமுறை சுட்டிக்காட்டியுள்ளேன்.  2024-ஆம் ஆண்டில் மட்டும் இதுவரை 324 மீனவர்களும், 44 படகுகளும் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ளானர், இது போன்ற தொடர் கைது நடவடிக்கைகளால் தமக மீனவ சமூகத்தினர் பெரும் இன்னல்களைச் சந்தித்து வருவதுடன் அவர்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுகிறது.

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர்கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைந்து விடுவிப்பதற்கு, உறுதியான தூதரக நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள் வேண்டும்”

எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.