சென்னை

மிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொதுமக்கள் ஃபார்முலா 4 கார் பந்தயத்தை இலவசமாக பார்க்கலாம் என அறிவித்துள்ளார்.

தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சென்னையில் வரும் ஆகஸ்ட் 31ம் தேதி ஃபார்முலா 4 கார் பந்தயத்தை நடத்த முடிவு செய்துள்ளது. இந்த போட்டி கடந்த டிசம்பர் மாதம் நடக்கவிருந்து பிறகு ஒத்தி வைக்கப்பட்டது

தற்போது அந்த போட்டி நடைபெற உள்ளது குறித்து விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,

”ஃபார்முலா 4 கார் பந்தயத்தை 8,000 பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட உள்ளன. இந்த கார் பந்தயத்தை பொதுமக்கல் சனிக்கிழமை காலையில் இலவசமாக பார்க்கலாம்.

பிறகு சனிக்கிழமை மதியத்திற்கு மேல் தகுதிச்சுற்று போட்டிகள் நடத்தப்பட்டு இரவு 10.30 மணிவரை கார் பந்தய போட்டிகள் நடைபெறும். கார் பந்தயம் போக்குவரத்துக்கு எந்தவிட இடையூறும் ஏற்படாத வகையில் கார் பந்தயம் நடத்தப்படும்.”

என்று அறிவித்துள்ளார்.